கே .குமணன்
குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ளாக்கப்பட்டமையை கண்டித்து 21 ஆம் திகதி புதக்கிழமை முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்ட முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுளமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் காணி அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையை கண்டித்தும் நீதிமன்ற உத்தரவை மீறி குருந்தூர் மலையில் நடைபெறும் பௌத்த கட்டுமான நடவடிக்கைக்கு எதிராகவும் கண்டன போராட்டம் ஒன்று இன்று காலை (22) முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோரை நேற்று (21) மாலை முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்த பொலிஸார் வாக்கு மூலம் பெற்றபின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த பின்னர் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தொல்லியல் திணைக்களத்தினரால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை விட மேலதிகமாக நான்குபேரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கபடுவதற்கு எதிராகவும் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த கட்டுமானங்கள் இடம்பெறுவதற்க்கு எதிராகவும் ஜனநாயக வழியில் போராட்டம் மேற்கொண்டவர்களை கைது செய்த பொலிஸாரின் அராஜக செயற்பாட்டை கண்டித்தும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இந்த கண்டன போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM