600 மெட்ரிக் தொன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கும் அவுஸ்திரேலியா

Published By: P. Saranya

22 Sep, 2022 | 11:08 AM
image

(எம்.மனோசித்ரா)

அவுஸ்திரேலியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 15 மில்லியன் டொலர் பெறுமதியான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உதவி பொருட்களின் முதற்கட்டம் நேற்று புதன்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளது. 

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெகுவிரைவில் இவை பகிர்ந்தளிக்கப்படும் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அத்தோடு 600 மெட்ரிக் தொன் அரிசி உள்ளடங்களாக, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவையும் வெகு விரைவில் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. உலக உணவு திட்டத்துடன் இணைந்து இலங்கைக்கு இந்த நன்கொடை வழங்கப்படுகிறது.

'அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பல தசாப்தகாலமாக நட்புறவைப் பேணி வருகின்றன. அந்த வகையில் முன்னொருபோதும் இல்லாதவாறு இலங்கை இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு உதவிகளை வழங்குவதானது இரு நாடுகளுக்குமிடையிலான நல்லெண்ணத்தின் விரிவாக்கமாகும்.' என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை உயர்வுகள், தொழில்களை இழத்தல் மற்றும் வருமானம் குறைவடைதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உயிர் காக்கும் உணவை வழங்க உலக உணவு திட்டத்துடன் இணைந்து நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'உலக உணவு திட்டத்தின் அவசரகால நடவடிக்கைக்கு முதலில் பங்களித்தது அவுஸ்திரேலியாவாகும். இது தற்போதைய நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க எமக்கும் உதவியது' என்று உலக உணவு திட்டத்தின் இலங்கைப் பிரதிநிதியும் நாட்டுப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்திக் குறிப்பிட்டுள்ளார்.

'அவுஸ்திரேலியாவின் நன்கொடையின் மூலம், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நாம் நிதி மற்றும் உணவு என்பவற்றை வழங்குகிறோம்.' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரித்துள்ளது மற்றும் சமீபத்திய உலக உணவு திட்டத்தின் ஆய்வுகள் அவசர உதவியின்றி எதிர்வரும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57
news-image

மாத இறுதிக்குள் வருமான வரியைச் செலுத்துங்கள்...

2026-09-16 12:44:59
news-image

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முழுவதையும் வற்றச்...

2026-09-16 12:12:13
news-image

ஞானசார தேரர் மீதான வழக்கு செப்டெம்பர்...

2026-09-16 12:21:37
news-image

மிரிஹானாவில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி...

2026-09-16 13:04:17
news-image

மூன்று மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு...

2026-09-16 12:00:58
news-image

ரணிலை சந்தித்தார் இலங்கைக்கான புதிய சீனத்...

2026-09-16 14:23:24
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான சொகுசு வாகன...

2026-09-16 11:52:52