(எம்.எப்.எம்.பஸீர்)
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்லடொக்சினை உள்ளடக்கிய சமபோஷ, யஹபோஷ, லக்போஷவை உற்பத்தி செய்து விநியோகித்தமையை மையப்படுத்தி நான்கு முன்னணி நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்களுக்கு நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 21) உத்தரவிட்டது.
கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திலகரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்ததுடன் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி மன்றில் ஆஜராக வேண்டும் என இதன் போது அறிவித்தல் அனுப்பினார்.
குறித்த நான்கு நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்கள் உற்பத்தி செய்து விநியோகித்த 'போஷ' ரக உணவில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட எப்லடொக்சின் அடங்கியுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என, கொத்தட்டுவ பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ.எஸ். கசுன் நீதிமன்றில் முறைப்பாடுகளை தாக்கல்ச் செய்துள்ளார்.
அதனை ஆராய்ந்தே நீதிவான் இந்த அழைப்பானையை அனுப்பினார்.
3 வயது வரையிலான பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் பொருந்தாத, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்லடொக்சினை கொண்டிருக்கும், தரமற்ற சமபோஷ, யஹபோஷ மற்றும் லக்போஷவை உற்பத்தி செய்து விநியோகித்தமை தொடர்பாக 1991 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க உணவுத் திருத்தச் சட்டத்தின் கீழ், கொத்தட்டுவ பொது சுகாதார பரிசோதகர் பணிமனை, 4 முன்னணி நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்களுக்கு எதிராக 4 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பிளன்டி பூட் நிறுவனம், மெலிபன் டேரி அக்ரோ தனியார் நிறுவனம், மெலிபன் மில்க் ப்ரொடெக்ட்ஸ் நிறுவனம், லக்மீ எக்ஸ்போர்ட் லங்கா நிறுவனம் ஆகிய நான்கு நிறுவனங்கள், அதன் பணிப்பாளர்களுக்கு எதிராகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM