அதிகளவான எப்லடொக்சின் அடங்கிய சமபோஷ, யஹபோஷ, லக்போஷ : நான்கு நிறுவனங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல்

Published By: Digital Desk 3

22 Sep, 2022 | 02:46 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற,  பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்லடொக்சினை உள்ளடக்கிய சமபோஷ, யஹபோஷ, லக்போஷவை   உற்பத்தி செய்து விநியோகித்தமையை மையப்படுத்தி  நான்கு முன்னணி நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்களுக்கு நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 21) உத்தரவிட்டது.  

கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திலகரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்ததுடன் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி மன்றில் ஆஜராக வேண்டும் என இதன் போது அறிவித்தல் அனுப்பினார்.

குறித்த நான்கு நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்கள் உற்பத்தி செய்து விநியோகித்த 'போஷ' ரக உணவில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட எப்லடொக்சின்  அடங்கியுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என, கொத்தட்டுவ பொது சுகாதார பரிசோதகர்  பி.ஏ.எஸ். கசுன் நீதிமன்றில் முறைப்பாடுகளை தாக்கல்ச் செய்துள்ளார்.

அதனை ஆராய்ந்தே நீதிவான் இந்த அழைப்பானையை அனுப்பினார்.

3 வயது வரையிலான பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் பொருந்தாத,  பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்லடொக்சினை கொண்டிருக்கும்,  தரமற்ற சமபோஷ, யஹபோஷ மற்றும் லக்போஷவை உற்பத்தி செய்து  விநியோகித்தமை தொடர்பாக 1991 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க உணவுத் திருத்தச் சட்டத்தின் கீழ், கொத்தட்டுவ பொது சுகாதார பரிசோதகர் பணிமனை, 4 முன்னணி நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்களுக்கு எதிராக  4 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பிளன்டி பூட் நிறுவனம்,  மெலிபன் டேரி அக்ரோ தனியார் நிறுவனம், மெலிபன் மில்க் ப்ரொடெக்ட்ஸ் நிறுவனம்,  லக்மீ  எக்ஸ்போர்ட் லங்கா நிறுவனம்  ஆகிய நான்கு நிறுவனங்கள், அதன் பணிப்பாளர்களுக்கு எதிராகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09
news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-24 12:39:24
news-image

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

2025-03-24 12:32:49
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42