(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
நாட்டில் கஞ்சா சட்டவிரோதமற்றது என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் கூறுவராக இருந்தால், பாராளுமன்றத்திற்கு அருகில் காணப்படும் வெற்றுக் காணிகளிலும் அதனை வளர்க்கலாமே என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அரச வருமானத்தை அதிகரிக்கும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது உரையின்போது, கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதி கேட்கத்தேவையில்லை. அது சட்டவிரோதமான செயல் அல்ல என தெரிவித்து, எதிர்க்கட்சியை பார்த்து விமர்சன ரீதியில் கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஹர்ஷடி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் எண்ணங்களுடனான மாற்றங்களுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கஞ்சாவை ஏற்றுமதி செய்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை.
அத்துடன் அவர் கஞ்சா சட்டவிரோதமற்றது என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அதனை வளர்க்க முடியும்தானே. பாராளுமன்ற அருகிலும் வெற்றிடங்களில் வளர்க்கலாம். இங்கே அருகில் ஒரு ஏக்கர் காணி உள்ளது. அதில் ஏற்றுமதிக்காக கஞ்சா செய்கையை செய்யுங்கள். அதனை செய்யாது எதற்கு எங்களை ஏசுகின்றீர்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM