நுகேகொடையில் கார் - ரயில் விபத்து : காரில் பயணித்த பெண் படுகாயம்

Published By: Digital Desk 5

21 Sep, 2022 | 12:01 PM
image

நுகேகொட பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் காரில் பயணித்த பெண்ணொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை நுகோகொடையில் உள்ள பங்கிரிவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியில் வசித்துவரும் கணவரும், மனைவியும் காரில் வீட்டிலிலிருந்து வெளியேறி சிறிது நிமிடத்தில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் குறித்த கார் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த பெண் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்த மிரிஹான பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15