தொழில்சார் நிபுணர்களுக்கான எரிபொருள் கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயவும் -  உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு அறிவுறுத்தல்

Published By: Digital Desk 4

21 Sep, 2022 | 06:10 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தொழில்சார் நிபுணர்களுக்கு விநியோகிக்கப்பபடும்  எரிபொருள் கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஆராயுமாறு உயர் நீதிமன்றம் இன்று (20) சட்ட மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

நீதியரசர் விஜித்  மலல்கொட தலைமையிலான  மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய குழாம் இதற்கான  அறிவித்தலை வழங்கியது.

மின்சாரம், சமயல் எரிவாயு, எரிபொருள், பால் மா, மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள  இரு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று ( 20) விசாரணைக்கு  வந்த போதே  உயர் நீதிமன்றம்  இதனை அறிவித்தது.

  மனுதாரர்களான  இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கான  சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள் பிரகாசத்தின் ஆலோசனைக்கு அமைய  ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கனக ஈஸ்வரன்,  உதித்த இகலஹேவா சட்டத்தரணிகளான சுரேன் ஞானராஜா,  புலஸ்தி ஹேவமான்ன  உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாத்தினர் இம்மனு தொடர்பில் ஆஜராகின்றனர்.

எஸ்.சி.எப்.ஆர். 106/ 22 மற்றும் எஸ்.சி.எப்.ஆர். 107 /22 ஆகிய இலக்கங்களின் கீழ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் இந்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,  அதன் உப தலைவர்  ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட,  செயலாளர்  சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, பொருளாலர் சட்டத்தரணி ரஜித்த பெரேரா,  பிரதி செயலர்  சட்டத்தரணி பசிந்து சில்வா ஆகியோரால் இந்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களிலும்,  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள்,  திறை சேரியின் செயலர்,  மத்திய வங்கி ஆளுநர்,  மத்திய வங்கியின் நிதிச் சபை,  இலங்கை மின்சார சபை,  கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம்,  அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்,  சட்ட மா அதிபர் உள்ளிட்ட 42 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

 இன்று மனு விசாரணைக்கு வந்த போது,  மனுதாரர்களுக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா,  சட்டத்தரணிகள்,  வைத்தியர்கள், பொறியியலாளர்கள் போன்ற தொழில்சார் நிபுணர்கள் தமது வேலையின் போது தூர இடங்களுக்கு பயணிக்க வேண்டி இருப்பதாக சுட்டிக்காட்டினார். தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கோட்டா அவர்களது சேவையை சரிவர முன்னெடுக்க போதுமானதாக இல்லை எனவும் அது அதிகரிக்கப்படல் வேண்டும் எனவும்   ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா கோரினார்.

 இதனை ஆராய்ந்த சட்ட மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கிய உயர் நீதிமன்றம் வழக்கை எதிர்வரும்  நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

முன்னதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல்ச் செய்துள்ள இரு மனுக்களிலும், கணிய எண்ணெய்,  மின்சாரம், சமயல் எரிவாயு, உணவு, மருந்து, பால் மா உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டும் மனுதாரர்கள்,  அதனால் மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் மக்களின் அடிப்படை உரிமைகல் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்களான இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால் மக்களுக்கு அத்தியவசியமான பொருட்களாக கருதப்படும் உணவு, சமயல் எரிவாயு, பால் மா, மின்சாரம், மருந்துகள் போன்றவற்றை  தட்டுப்பாடின்றி  நிவாரண விலையின் கீழ் தொடர்ச்சியாக மக்களுக்கு விநியோகிக்க முடியுமான செயற்றிட்டம் ஒன்றினை தயரைக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தர்விடுமாறு இந்த மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.

அதே போல், பொருளாதார நிபுணர்கள்,  அரச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடாத்தி  தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதற்கான குறுகிய கால,  மத்திய கால நீண்ட கால  கொள்கை ரீதியிலான செயற்றிட்டம் ஒன்றினை வகுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறும்  மனுக்களில் கோரப்பட்டுள்ளன.

 அத்துடன்  பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு  நிவாரணம் வழங்க தேவையான  தேசிய கொள்கை ஒன்றினை தயாரிக்கவும் உத்தரவிடுமாறு மனுவூடாக கோரப்பட்டுள்ளது.

அதனைவிட, தேசிய விவசாயம்,  பால் உற்பத்தி,  பன்னை உற்பத்திகளை அதிகரிக்க கொள்கை ரீதியிலான  செயற்றிட்டம்  ஒன்றினை வகுக்கவும் அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு மனுக்களில் கோரப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 118...

2025-03-21 10:10:09
news-image

திருகோணமலையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 138...

2025-03-21 10:00:46
news-image

"Clean Sri Lanka" திட்டத்தின் ​நோக்கத்தை...

2025-03-21 09:57:20
news-image

மன்னாரில் 38 வேட்பு மனுக்கள் தாக்கல்...

2025-03-21 09:56:24
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; மற்றுமொரு...

2025-03-21 10:04:12
news-image

அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால்...

2025-03-21 10:01:35
news-image

வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்ற நபர்...

2025-03-21 10:00:27
news-image

வாரியப்பொலவில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து...

2025-03-21 09:47:43
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 வேட்புமனுக்கள் ஏற்பு...

2025-03-21 09:59:18
news-image

கொச்சிக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம்...

2025-03-21 09:54:55
news-image

திருகோணமலை மாவட்டத்தில் 103 அரசியல் கட்சிகளும்...

2025-03-21 09:51:06
news-image

நுவரெலியா மாவட்டத்தில் 23 வேட்பு மனுக்கள்...

2025-03-21 09:50:41