தேசிய சபை அமைக்கும் பிரேரணை வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றம்

Published By: Digital Desk 4

20 Sep, 2022 | 08:58 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசினால் முன்வைக்கப்பட்ட தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பின்றி  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

  பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையயில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற பிரதான நடவடிக்கைகளை அடுத்துபிரதமர் தினேஷ் குணவர்தனவினால் தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணையை சபையி சமர்ப்பி்தது ஆதரவு கோரி இருந்தார்.

இதன்போது கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சகல கட்சிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதால் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு விவாதத்தை நடத்தலாமென பிரதமர் தினேஷ் குணவர்தன கோரினார்.

எனினும் தீர்மானத்தை நிறைவேற்றாமலேயே  இது தொடர்பான விவாதம் இடம்பெற்ற நிலையில் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தேசிய சபைக்கு எதிரவரும் 6மாதங்கள் வரைமட்டுமே  .ஆதரவளிப்பதாகத் தெரிவித்தது. அதேநேரம் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான  தேசிய மக்கள் சக்தி, பேராசிரியர் பீரிஸ் தலைமையிலான பொதுஜன பெரமுனவின் சுயாதீன எதிர்க்கட்சி ஆகியன  இதனை எதிர்ப்பதாக தெரிவித்தன.

தேசிய   சபை தொடர்பில் தமக்கு  நல்லெண்ணம் கிடையாதென விமல் வீரவன்ச அணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் விவாத நிரைவில் வாக்கெடுப்பு கோரப்படலாமென எதிர்பார்க்கப்பட்டபோதும்  தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற யாரும் வாக்கெடுப்பு கோராத நிலையில்  தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணை  வாக்கெடுப்பின்றி  சபையில் நிறைவேற்றப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 10:59:21
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51