(என்.வீ.ஏ.)
கிரிக்கெட் பணிப்பாளராக பதவி வகித்துவந்த டொம் மூடி, அப் பதவிக்கான ஒப்பந்தத்திலிருந்து உடன் அமுலுக்கு வரும்வகையில் விலகிக்கொள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பரஸ்பர உடன்பாட்டுக்கு வந்தது.
டொம் மூடி நேரடியாக அறிவிக்கவேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தற்போது நீக்கப்பட்டுள்ளதால் அவரது சேவை தேவையில்லை என்பதை நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு கருதியதன் அடிப்படையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் சிபாரிசின் பேரில் கிரிக்கெட் பணிப்பாளராக 2021 மார்ச் 1ஆம் திகதி டொம் மூடி நியமிக்கப்பட்டார்.
டொம் மூடி அவரது பதவிக் காலத்தில் இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறைக்கு வழங்கிய பங்களிப்புக்கு நன்றி கூறிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம், அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி அளிக்க வேண்டும் என வாழ்த்தியது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் மீண்டும் இணைந்து செவையாற்ற கிடைத்ததை ஒரு பாக்கியமாக கருதுவதாக குறிப்பிட்ட டொம் மூடி, தொழல்நுட்ப ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலுக்கு அமைய தனது பதவிக் காலத்தில் சாதிதத்தையிட்டு பெருமை அடைவதாக டொம் மூடி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM