இந்தோனேஷியாவிலுள்ள நபர் ஒருவர், பூனையொன்றை கொலை செய்து, சமைத்து உட்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான இச்சந்தேக நபர், இந்தோனேஷியாவின் வடக்கு பெங்க்குலு நகரில் வைத்து கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்த, கர்ப்பம் தரிந்திருந்த பூனையொன்றையே இந்நபர் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நபர் மேற்படி சம்பவத்தின்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதை அவதானித்த ஒருவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். அதையடுத்து 24 மணித்தியாலங்களுக்குள் மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சந்தேக நபர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூனை இறைச்சியை உட்கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் இந்நடவடிக்கையில் தான் ஈடுபட்டதாக மேற்படி நபர் கூறியுள்ளார்.
இச்சந்தேக நபரை மனநல வைத்தியசாலையொன்றில் 14 நாட்கள் சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவருக்கு எதிராக வழக்கு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் குற்றவாளியாக காணப்பட்டால் 9 மாதங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM