இம்முறை திலீபனின் நினைவேந்தல் நிகழ்வானது மக்களின் எழுச்சியாக மக்களின் புரட்சியாக முன்னாள் முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார் இன்றைய தினம் (20) திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தியாக தீபம் திலீபன் அவர்களுடைய நினைவேந்தலை முன்னெடுக்கும் முகமாக தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று இணைந்து ஒற்றுமையாக இந்த நினைவேந்தலை ஒரு மக்கள் எழுச்சியாக புரட்சியாக முன்னெடுக்கும் விதமாக இன்றைய தினம் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில தியாக தீபம் நினைவேந்தலினை ஒழுங்கு செய்கின்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது 15 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.
அந்த நிகழ்வினை முன்னெடுக்கின்ற பொது கட்டமைப்பதற்காக நாங்கள் தியாக தீபம் திலீபனுடைய நினைவுகளில் எந்தவித முரண்பாடும் இன்றி யாரும் எந்தவித சுய லாபத்திற்கும் இதனை பயன்படுத்தாத விதத்திலே ஒட்டுமொத்த தமிழினமாக விடுதலைக்கான பயணமாக முன்னெடுப்பதற்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் இதய சுத்தி ஓடும் இலட்சியப்பற்றோடும் முன்னெடுக்க இருக்கின்றோம்.
நினைவேந்தல் கட்டமைப்பிலே மதத் தலைவர்கள் பல்கலைக்கழக மாணவருடைய பிரதிநிதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய பிரதிநிதிகள் மாவீரர்களினுடைய பெற்றோர்கள் முன்னாள் போராளிகள் அரசியல் கைதிகளினுடைய பிரதிநிதிகள் விஞ்ஞான ஆய்வு மன்றத்தினுடைய பிரதிநிதி போன்ற பலர் பொதுகட்டமைப்பிலே உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.
தீபகவிருட்சம் அமைப்பு சார்ந்த பிரதிநிதியும் கட்டமைப்பிலே உள்ளடக்கப்பட்டுள்ளார்
அந்த வகையிலே காலத்தின் தேவை கருதி விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்றைய கூட்டம் இந்த கட்டமைப்பு தேர்வில் நிறைவடைந்து இருக்கின்றது.
இப்போதில் இருந்து இந்த கட்டமைப்பானது தன்னுடைய ஒருங்கிணைப்பு பணிகளை முன்னெடுக்க இருக்கின்றது அந்த விதத்திலே கட்சித் தலைவர்களை சந்தித்து ஏனைய மக்கள் ஆதரவை பெற்று எவ்வாறு இந்த நிகழ்வின் முன்னெடுக்கலாம் என்பது பற்றி நாங்கள் தொடர்ச்சியாக செயல்பட இருக்கின்றோம்.
நினைவேந்தல் இம்முறை மிகவும் சிறப்பாக இடம் பெற வேண்டும் எங்களுடைய உறவுகள் அனைவரும் இதற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும் மிக எழுச்சியாக அனைவரும் இம்முறை இந்த எழுச்சியினை காட்ட வேண்டும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். என்ற கோட்பாட்டுக்கு அமைய மக்களுடைய எழுச்சி எப்பொழுது ஏற்படுகின்றதோ எங்களுடைய விடுதலை இனத்தினுடைய விடுதலை அனைத்துமே சாத்தியமாகும் என்பது தான் நிதர்சனமான உண்மை அந்த அடிப்படையிலே இந்த பொது கட்டமைப்பு செயல்பட்டு திலீபனின் நினைவேந்தலை மிக சிறப்பாக நினைவு கூறும் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM