முட்டை உற்பத்தியை கைவிடும் நிலை - அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம்

Published By: Vishnu

19 Sep, 2022 | 01:50 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் பண்ணையாளர்கள் அநேகமானோர் முட்டை உற்பத்தியை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் எச்.எம்.பீ. அழஹகோன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் பண்ணையாளர்கள் அநேகமானோர் முட்டை உற்பத்தியை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரச வர்த்தமானியை வெளியிடும் போது குறித்த தரப்பினர் சிலர் எங்களுடன் கலந்துரையாடினார்கள்.

முட்டைஒன்றினை  43 ரூபா மற்றும் 45 ரூபாவிற்கு விற்குமாறு சில்லறை விலையை நிர்ணயித்தார்கள். நாம் அதை எதிர்த்து இவ்வாறு செய்யும் போது பண்ணைகளை கைவிடும் நிலை ஏற்படும் என்று கூறினோம். இருப்பினும் தான்தோன்றித்தனமாக வர்த்தமானியை வெளியிட்டார்கள். அதன் விளைவாக இன்று இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்த நிலையில், கோழி பண்ணையாளர்கள் இது தொடர்பாக கூறுகையில் கோழி தீவனம் மற்றும் ஏனைய பொருட்கள் விலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எம்மால் அரசாங்கம் கூறும் விலையில் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாது.தற்போது பண்ணைகளில் உள்ள 40 வீதமான கோழிகளை அகற்றினோம். 

அந்த கோழிகளுக்கு தேவையான தீவனப் பொருட்கள் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமமே இதற்குப்  பிரதான காரணமாகும்.குருநாகல் மாவட்டத்தில் உள்ள மாவத்தகம, ஹெட்டிபொல, வாரியபொல, குளியாப்பிட்டிய போன்ற ஆகிய பகுதிகளில் உள்ள கோழி பண்ணையாளர்கள் தமது தொழிலை கைவிட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03