சண்முகம் தவசீலன்
திலீபன் வழியில் வருகிறோம் ஊர்தி பவனி இன்று (19) முல்லைத்தீவை சென்றடைந்த நிலையில், அங்கு மக்கள் திரண்டு அஞ்சலிசெலுத்தியதுடன் முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு நல்லூரில் பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஷ்டக்கப்படுகிறது.
இந்நிலையில் திலீபனின் கோரிக்கைகள் மற்றும் செயற்ப்பாட்டினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் கடந்த 15.09.2022 அன்று பொத்துவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த திலீபன் வழியில் வருகிறோம் என்ற ஊர்தி பவனி இன்று முல்லைத்தீவை சென்றடைந்தது.
திருகோணமலையில் இருந்து தமிழர் தாயகமான மணலாறு பகுதியை கடந்து முல்லைத்தீவுக்கு சென்றடைந்த ஊர்திக்கு செம்மலை அளம்பில் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அதனை தொடர்ந்து முல்லைத்தீவு நகர் பகுதிக்கு வருகை தந்த ஊர்திக்கு முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மக்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அதனை தொடர்ந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை ஊர்தி சென்றடைந்து அங்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு ,கைவேலி, வள்ளிபுனம், உடையார்கட்டு, விசுவமடு பகுதிகளில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஊர்தி வவுனியா மாவட்டம் நோக்கி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM