மக்களின் மனங்களை வென்றெடுக்க முயற்சிக்காது சர்வதேச நாடுகளின் மனங்களை வென்றெடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஜெனிவா அறிக்கையை ஏற்றுக்கொண்ட போதே நாம் குற்றவாளிகள் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஆகவே பொறுப்புகூறலில் அரசாங்கம் அக்கறை காட்டவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
யுத்தகுற்ற விசாரணைகளை சரியாக மேற்கொண்டு உண்மைகளை கண்டறிந்தால் சர்வதேச நாடுகள் எம்மை ஆதரிக்கும் நிலைமை ஏற்படலாம் எனவும் அந்த முன்னணி குறிப்பிட்டது.
போர்க்குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புகூறல் தொடர்பிலான பொறிமுறையில் அரசாங்கம் சரியாக நடந்துகொள்ளாத நிலையில் ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வில் மீண்டும் இலங்கை தொடர்பில் ஆராயும் நிகழ்ச்சி நிரல் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை வினவிய போதே கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை தொடர்பில் சர்வதேசம் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. அதாவது எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எவையும் நியாயத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக மேற்கு நாடுகளின் தேவைக்காகவும், அவர்களின் ஆதிக்கத்தை பிரயோகிக்கும் வகையிலுமே இந்த குற்றசாட்டுகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன. அதன் காரணத்தினால் தான் கடந்த காலத்தில் இந்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்து வந்தது.
எனினும் ஆட்சிமாற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் ஜெனிவா அறிக்கையை ஏற்றுக்கொண்டபோதே நாம் குற்றங்களை ஏற்றுக்கொண்டதாக அமைந்துவிட்டது. அவ்வாறான நிலையில் இப்போது நாம் அவர்களின் சூழ்ச்சியில் விழுந்துவிட்டோம். ஆகவே இப்போது அரசாங்கம் சர்வதேச அறிக்கைகளை கவனத்தில் கொள்ளாது உண்மைகளை கண்டறியும் பொறிமுறையை சரியாக கையாள வேண்டும்.
அதேபோல் நாம் சர்வதேச தரப்பை திருப்திப்படுத்தும் வேலையை செய்யாது மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வேலையினையே மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நியாயத்தை வென்றுகொடுத்து அதேவேளை குற்றவாளிகளை கண்டறியும் வேலையினை அரசாங்கம் உள்ளக பொறிமுறைகளின் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த காலத்தைப்போல் மக்களையும் ஏமாற்றி சர்வதேச நாடுகளையும் ஏமாற்றும் வேலையினை செய்யாது நாட்டை காப்பாற்றி ஜனநாயக்கதை பலப்படுத்தும் வேலையை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் அமைப்பில் வெறுமனே அமெரிக்கா மட்டுமே அங்கம் வகிக்கவில்லை. உலகின் பல்வேறு நாடுகள் இந்த கட்டமைப்பில் உள்ளன. ஆகவே இலங்கை மேற்கொள்ளும் செயற்பாட்டில் ஏனைய நாடுகள் இலங்கையை ஆதரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆகவே அரசாங்கமே நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM