சர்வதேச நாடுகளின் மனங்களை வென்றெடுக்கவே அரசு முயற்சி

26 Dec, 2015 | 10:22 AM
image

மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்க முயற்­சிக்­காது சர்­வ­தேச நாடு­களின் மனங்­களை வென்றெடுக்கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. ஜெனிவா அறிக்­கையை ஏற்­றுக்­கொண்ட போதே நாம் குற்­ற­வா­ளிகள் என்­பதை ஏற்­றுக்­கொண்­டு­விட்டோம். ஆகவே பொறுப்­பு­கூ­றலில் அர­சாங்கம் அக்­கறை காட்­ட­வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.

யுத்­த­குற்ற விசா­ர­ணை­களை சரி­யாக மேற்­கொண்டு உண்­மை­களை கண்­ட­றிந்தால் சர்­வ­தேச நாடுகள் எம்மை ஆத­ரிக்கும் நிலைமை ஏற்­ப­டலாம் எனவும் அந்த முன்னணி குறிப்­பிட்டது.

போர்க்­குற்றம் உள்­ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அர­சாங்கம் பொறுப்­பு­கூறல் தொடர்­பி­லான பொறி­மு­றையில் அர­சாங்கம் சரி­யாக நடந்­து­கொள்­ளாத நிலையில் ஜெனி­வாவில் எதிர்­வரும் ஜூன் மாதம் நடை­பெ­ற­வுள்ள மனித உரி­மைகள் அமர்வில் மீண்டும் இலங்கை தொடர்பில் ஆராயும் நிகழ்ச்சி நிரல் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை வின­விய போதே கட்­சியின் ஊட­கப்­பேச்­சாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்கை தொடர்பில் சர்­வ­தேசம் முன்­வைத்­து­வரும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­னணி தெளி­வான நிலைப்பாட்டில் உள்­ளது. அதா­வது எம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் எவையும் நியா­யத்தின் அடிப்­ப­டையில் முன்­வைக்­கப்­பட்ட ஒன்­றல்ல. மாறாக மேற்கு நாடு­களின் தேவைக்­கா­கவும், அவர்­களின் ஆதிக்­கத்தை பிர­யோ­கிக்கும் வகை­யி­லுமே இந்த குற்­ற­சாட்­டுகள் அனைத்தும் முன்­வைக்­கப்­பட்­டன. அதன் கார­ணத்­தினால் தான் கடந்த காலத்தில் இந்த குற்­றச்­சாட்­டு­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளாது புறக்­க­ணித்து வந்­தது.

எனினும் ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்கம் ஜெனிவா அறிக்­கையை ஏற்­றுக்­கொண்டபோதே நாம் குற்­றங்­களை ஏற்­றுக்­கொண்­ட­தாக அமைந்­து­விட்­டது. அவ்­வா­றான நிலையில் இப்­போது நாம் அவர்­களின் சூழ்ச்­சியில் விழுந்­து­விட்டோம். ஆகவே இப்­போது அர­சாங்கம் சர்­வ­தேச அறிக்­கை­களை கவ­னத்தில் கொள்­ளாது உண்­மை­களை கண்­ட­றியும் பொறி­மு­றையை சரி­யாக கையாள வேண்டும்.

அதேபோல் நாம் சர்­வ­தேச தரப்பை திருப்­திப்­ப­டுத்தும் வேலையை செய்­யாது மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்கும் வேலை­யி­னையே மேற்­கொள்ள வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­களின் நியா­யத்தை வென்று­கொ­டுத்து அதே­வேளை குற்­ற­வா­ளி­களை கண்­ட­றியும் வேலை­யினை அர­சாங்கம் உள்­ளக பொறி­மு­றை­களின் மூல­மாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். கடந்த காலத்­தைப்போல் மக்­க­ளையும் ஏமாற்றி சர்­வ­தேச நாடு­க­ளையும் ஏமாற்றும் வேலை­யினை செய்­யாது நாட்டை காப்­பாற்றி ஜன­நா­யக்­கதை பலப்­ப­டுத்தும் வேலையை மட்­டுமே மேற்­கொள்ள வேண்டும்.

ஐக்­கிய நாடு­களின் அமைப்பில் வெறு­மனே அமெ­ரிக்கா மட்­டுமே அங்கம் வகிக்கவில்லை. உலகின் பல்வேறு நாடுகள் இந்த கட்டமைப்பில் உள்ளன. ஆகவே இலங்கை மேற்கொள்ளும் செயற்பாட்டில் ஏனைய நாடுகள் இலங்கையை ஆதரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆகவே அரசாங்கமே நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02