வெகுவிரைவில் மக்கள் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவில் தோற்றம் பெறும் - தயாசிறி எச்சரிக்கை

Published By: Vishnu

16 Sep, 2022 | 01:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

காலி முகத்திடல் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது ஆகவே மக்கள் போராட்டம் முடிவடைந்து விட்டது என எண்ணுவது தவறு. வெகுவிரைவில் மக்கள் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவில் தோற்றம் பெறும்.

அப்போராட்டம்  பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் 15 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இளைஞர் யுவதிகளின் பங்குப்பற்றலுடன் ஆரம்பமான காலி முகத்திடல் போராட்டம் அரசியல்,சமூக கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் பொதுஜன பெரமுனவ தலைமையிலான அரசாங்கத்தின் ஜனாதிபதி,பிரதமர் உட்பட முழு அமைச்சரவையையும் பதவி விலகுமாறு ஜனநாயக ரீதியில் வலியுறுத்தினார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஜனநாயக ரீதியில் பதவி விலகாத காரணத்தினால் இறுதியில் மக்கள் போராட்டத்தினால் அவர்கள் இருவரும் பதவி விலக நேரிட்டது.

போராட்டத்தின் ஊடாக நாட்டு மக்கள் விடு;த்த செய்தியை அரசியல் தரப்பினர் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை.

காலி முகத்திடல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததால் மக்கள் போராட்டம் இனி தோற்றம் பெறாது என அரசியல் தரப்பினர் கருதுவது முற்றிலும் தவறானது.கடந்த காலத்தை காட்டிலும் தற்போது நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

நாட்டு மக்களின் அபிலாசைக்கு மதிப்பளிக்காமல் அரசாங்கம் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு அவதானம் செலுத்தியுள்ளதால் இன்னும் மூன்று நான்கு மாத காலத்திற்குள் மக்கள் போராட்டம் திட்டமிட்ட வகையில் பலமாக தீவிரமடையும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு ஜனநாயகத்திற்கு...

2026-08-09 17:28:02
news-image

நாமல் ராஜபக்‌ஷக்கு சிறைச்சாலைகளில் அதிக வாக்குகள்:...

2026-08-09 17:51:42
news-image

தென் கொரியாவில் மத சுதந்திரம், கருத்துச்...

2026-08-09 22:16:45
news-image

அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது...

2026-08-09 17:53:18
news-image

மாகாண சபை தேர்தல் தாமதத்திற்கு எல்லை...

2026-08-09 17:56:52
news-image

எந்தவொரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை: சிறிதரனுக்கு...

2026-08-09 17:53:01
news-image

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல்...

2026-08-09 20:19:40
news-image

சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய...

2026-08-09 18:04:26
news-image

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக...

2026-08-09 17:33:26
news-image

சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார், கட்டார்...

2026-08-09 17:16:31
news-image

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில்...

2026-08-09 16:37:05
news-image

பொலிஸாரின் பெயரில் இணையவழி மோசடி ;...

2026-08-09 17:20:47