ஆரோக்கிய துவாய்களின் ' விலை உயர்வு ; பாடசாலை மாணவிகளின் வரவில் வீழ்ச்சி -,ஆசிரியைகள், அரச, தனியார் ஊழியர்களுக்கும் சிக்கல்

Published By: Digital Desk 4

15 Sep, 2022 | 05:04 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 ' ஆரோக்கிய துவாய்களின் ' அதிக விலையேற்றம் காரணமாக , பாடசாலை மாணவியர், பல்கலைக்கழக மாணவியர், ஆசிரியைகள்,  அரச தனியார் துறை ஊழியர்கள் மாதவிடாய் காலப்பகுதியில் வீட்டிலிருந்து வெளியேறாமல், வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு தூண்டப்பட்டு வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 ஆசிரியர் தொழிற் சங்கத்துடன் இணைந்து கொழும்பில் விஷேட ஊடக சந்திப்பினை நடாத்திய மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக்   கூட்டமைப்பின் தலைவர்  வைத்தியர் சமல் சஞ்சீவ இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.

' வயதுக்கு வந்த மாணவிகள், மாதவிடாய் காலப்பகுதியில்  பாடசாலைக்கு செல்வதை தவிர்ப்பது அவதானிக்கப்பட்டு வருகின்றது.  விஷேடமாக கிராம புற மாணவியர்கள் இவ்வாறு பாடசாலை செல்வதை தவிர்ப்பதில் அதிகரிப்பை காண முடிகிறது.  சுகாதார துறைக்கு பெண் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இருக்கும் சூழலில் இந்த நிலைமை கவலைக்குரியதாகும்.

ஆரோக்கிய துவாய்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில்,  மாணவிகள் மட்டுமன்றி ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவிகள்,  அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும் பெண் ஊழியர்கள் என அனைவரும் மாதவிடாய் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு உத்தேசிக்கும் வீதம் அதிகரித்துள்ளது.' என வைத்தியர்களின் தொழிற்சங்கக்   கூட்டமைப்பின் தலைவர்  வைத்தியர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலர் ஜோசப் ஸ்டாலின், தற்போது நிலவும் பொருளாதார நிலைமையில், பாடசாலைகளில்  காலை கூட்டங்களின் போது மயக்கமுற்று விழும்  மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36
news-image

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-02-12 11:13:12
news-image

வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த...

2025-02-12 11:39:12
news-image

அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் நபரொருவர்...

2025-02-12 11:15:20
news-image

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் அமரபுர பீடத்தின்...

2025-02-12 11:32:15