யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு சிங்களப் படங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. அவை இரண்டும் இன்னும் திரைக்கு வராத முழுநீளத் திரைப்படங்களாகும்.
ஒரு சிங்களப் படத்தின் பெயர் ‘28’ என்பதாகும். பிரசன்ன ஜெயக்கொடி என்ற இளைஞர் எழுதி இயக்கியபடம். இத்திரைப்படம் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது.
ஆசியாவின் சிறந்த படமென நெட்பக் திரைப்பட விழாவில் விருது பெற்றது.
கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலத்தை மூவர் பழைய வேன் ஒன்றில் ஏற்றிச் செல்லுகின்றனர். ஒரு இளைஞர், அவரது நண்பர் ஒருவர், வேன் சாரதி ஆகிய மூவருமே ஏற்றிச் செல்கின்றனர். இறந்த அந்தப் பெண் தன்னை விட்டுப் பிரிந்து வாழ்ந்த தனது மனைவி என்பதை இளைஞன் இறுதியில் கண்டுகொள்கிறான்.
இதுதான் இப்படத்தின் கதைச்சுருக்கம். இறந்த பெண்ணின் சடலமே கதை சொல்வதாகவே படம் அமைக்கப்பட்டிருக்கிறது. வைத்தியசாலையில் சடலங்கள் வைக்கப்படும் சவ அறையில் அப்பெண் நிற்பதாக காண்பிக்கப்படுகிறது. பின்பு பிரேதப் பெட்டிக்குள் இருந்தும் உரையாடுகிறது. ‘28’ சிங்களத் திரைப்படம் காண்பிக்கப்பட்டு முடிந்ததும் படத்தின் இயக்குநர் பிரசன்ன ஜெயகொடியும் தயாரிப்பாளரும் மேடையில் தோன்றி பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். மொழிபெயர்ப்பாளராக பரசுராமன் நிரஞ்சன் கலந்து கொண்டார்.
இந்தப் படத்துக்கு ஏன் ‘28’ என்று பெயர் வைத்தீர்கள்?
என்று ஒரு பார்வையாளர் கேட்டார். பெண் ஒருத்தியின் மாதவிடாய் சுற்றுக்காலம் 28 நாட்களாகும். இந்த மாதச்சுற்றின் பிரகாரமே பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனால்தான் ‘28’ என்று பெயர் வைத்தேன் என விளக்கம் கூறினார் இயக்குநர்.
அடுத்த சிங்களப் படத்தின் பெயர்தான் ‘சுலங்க கினி அறன்’ (காற்று தீப்பிடித்து விட்டது) விமுக்தி ஜெயசுந்தர என்ற இளைஞர் பிரதி எழுதி இயக்கித் தயாரித்த படம். இத் திரைப்படம் டோக்கியோ திரைப்பட விழாவில் விருதுபெற்றது. சிங்கப்பூர் திரைப்பட விழாவிலும் பரிசு பெற்றது.
கொழும்பிலுள்ள சிறுநீரக கடத்தல்கார வைத்தியர் ஒருவரின் கதைதான் படத்தின் கரு. கொடியவர்களின் உதவியுடன் அப்பாவிகளின் உடலங்கங்களை பிரித்தெடுத்து மற்றவர்களுக்கு பொருத்துவது தான் வைத்தியரின் தொழில்.
மனம் பேதமை பிடித்து அலையும் அந்த வைத்தியர் இறுதியில் தற்கொலை செய்கிறார். வைத்தியரின் ஆவி அப்பிரதேசத்தில் திரிவதாக காட்டப்படுகிறது. அந்தக் கிராமத்தில் சில இளைஞர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது தொலைவில் வைத்தியரின் ஆவி போடும் அலறலைக்கேட்டு இளைஞர்கள் பயந்து விடுகிறார்கள்.
இது போக இன்னுமொரு காட்சி. ஒரு பெண் வேலி அருகே நின்று உடைகளை காயவைத்துக் கொண்டிருக்கிறான். அவளது பார்வை கெமராவை நோக்கித் திரும்புகிறது. திடீர் என்று மயக்கம் போட்டு விழுந்து விடுகிறாள்.
அந்தப் பெண்ணருகே ஒரு நாய் நிற்கிறது. அது கெமராவை நோக்கியவாறே குரைக்கிறது.
இவையெல்லாம் வைத்தியரின் ஆவியைக் கண்டே அப்படிச் செய்கின்றன என்று இயக்குநர் எமக்கு உணர்த்துகிறார். வைத்தியர் செய்யும் வேறு அட்டூழியங்களும் காண்பிக்கப்படுகின்றன. பெண்ணுடன் குதத்தின்மூலம் புணருதல், மயக்கமான பெண்ணுடன் புணருதல் போன்ற காட்சிகளும் இடம்பெறுகின்றன.
இந்த திரைப்பட விழாவில் எந்த மொழிதிரைப்படங்களிலும் இடம்பெறாத காட்சிகளாக அவை அமைந்தன. பார்வையாளர்களின் கடுமையான விமர்சனத்துக்கு இப்படம் உள்ளானது. யாழ்ப்பாணத்தில் இப்படியான படம் காண்பிக்கக்கூடாது என ஒரு விமர்சகர் கூறியதை என்னால் அவதானிக்க முடிந்தது. இன்னும் பல பார்வையாளர்களும் இவ்வாறான கருத்துக்களையே வெளியிட்டனர். படம் முடிந்த பின் இயக்குநர் விமுக்தி ஜெயசுந்தரவும் நிர்வாணமாக நடித்த நடிகை சுரங்கா ரணவக்கவும் மேடையில் தோன்றினர்.
'படத்தின் இறுதிக்கட்டத்தில் ஒரு பெண் எதையோ கண்டு மயங்கி விழுகிறாள். நாய் குரைக்கிறது. பேய் போன்ற உருவங்கள் நாய் போன்ற மிருகங்களின் கண்களுக்கு தெரியும் என்று சொல்லப்படுகிறது. பேய் தோன்றுவதாக காட்சியில் சித்தரித்திருக்கின்றார்கள். அது சரியா?' என பார்வையாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
'ஆம் அப்படியான ஒரு கருத்து பார்வையாளர்கள் மனதில் தோன்ற வேண்டும் என்றே அப்படியான காட்சியை அமைத்தேன்' என இயக்குநர் பதில் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM