தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மல்லாவியில் அனுஷ்டிப்பு

Published By: Vishnu

15 Sep, 2022 | 05:04 PM
image

சண்முகம் தவசீலன்

தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மல்லாவியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

பாரத தேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து  தன் வாழ்வை தமிழரின் விடுதலைக்காக ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த முதலாவது தினம் இன்றாகும்.

தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் இடம்பெறுகிறது.

அந்தவகையில் தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மல்லாவியில் சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வ ஜன நீதி அமைப்பும் இணைந்து  10.09.2022 அன்று காங்கேசன்துறையில் ஆரம்பித்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி நகரை வந்தடைந்த நிலையில் அங்கு தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்ரிக்கப்பட்டது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16