தமிழகத்தை சீரழித்த வரலாறு காணாத வெள்ளபாதிப்பின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் அதனை முழுமையாக மறந்து விட்டு சிம்புவையும் இசையமைப்பாளர் அனிருத்தையும் கைது செய்யுங்கள். தூக்கிலிடுங்கள் என தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடிக்கின்றன.
உருவபொம்மைகள், செருப்பு மாலைகள், பிணையில் வெளிவரமுடியாத வழக்குகள், இதற்கெல்லாம் மேலாக சிம்புவை கைது செய்வதற்கு தனிப்படைகள் அமைத்து பொலிஸார் தேடுதல் வேட்டை. இதற்கெல்லாம் காரணம் ஒரு பாடல்....
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகிய பீப் பாடல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளுடன் சிம்பு எழுதி பாடியதாக வும் அனிருத் இசையமைத்ததாகவும் குற்றச்சாட்டு. இப் பாடல் முதலில் (You Tube) யூரியூப்பில் வெளியாகியது. பின்னர் வாட்ஸப், பேஸ்புக் என சமூகவலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து தமிழகமெங்கும் அனிருத்துக்கும் சிம்புவுக்கும் எதிராக பல போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. அத்தோடு பல மகளிர் அமைப்புகள் சிம்புவுக்கும் அனிருத்துக்கும் எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இதில் பிணையில் வெளிவரமுடியாத பிரிவும் ஒன்று. சிம்புவுக்கும் அனிருத்துக்கும் எதிராக போராட்டங்களை நடத்துபவர்கள் எல்லோரும் முன்வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இவர்கள் சமூகத்தை சீரழிப்பதாகவும் பெண்களை இழிவுபடுத்திவிட்டதாகவும் அடுத்த தலைமுறையை கெடுப்பதாகவும் குறிப்பாக குழந்தைகள் இப்பாடலினால் சீரழிவார்கள் என்பதே ஆகும்.
இவ்விடத்தில் ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். இதுவரை தமிழ் சினி மாவில் எத்தனையோ பாடல்கள் ஆபாசமாகவும் பெண்களை இழிவுபடுத்துவதாக வும் கொச்சை தமிழில் வெளிவந்துள்ளன. இல்லை என்று மறுக்க முடியாது. பெண்களை கவர்ச்சிப் பொருளாக மட்டும் காட்டுகின்ற தமிழ் சினிமாவை நாம் கைதட்டி ரசிக்கின்றோம். ஏன் எத்தனையோ திரைப்படங்கள் குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவு ஆபாசமாகவும் இரட்டை அர்த்தங்கள் நிறைந்ததாகவும் உள்ளன. பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் 5 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை, எந்நேரத்திலும் கைதாகலாம் என்ற நீதிமன்ற உத்தரவு. மேலும்,. வெளிநாட்டுக்கு தப்பி செல்ல கூடாத வகையில் கடவுச்சீட்டை முடக்கும் முயற்சி யில் பொலிஸார். இந்தளவு சிம்பு செய்த குற்றம் பாரதூரமானதா ?
சிம்பு வேண்டத்தகாத வார்த்தைகளை உபயோகித்து இப்பாடலை பாடியது குற்றம்தான். அதனை கண்டிப்பது தவறு அல்ல. ஆயினும், இப்பாடல் எந்த திரைப்படத்திலும் வெளியாகவில்லை, இசைத்தொகுப்பும் அல்ல உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டதில்லை. சிம்புவின் வீட்டில் அவர் விளையாட்டாக பாடி, அதனை வேண் டாம் என வீசிய பாடல். அதனை யாரோ திருடி இணையத்தில் வெளியிட்டதாகவே சிம்பு பகிரங்கமாக தெரிவித்தார் .
மேலும், சர்ச்சைக்குரிய பீப் பாடல் எனது பாடல் தான். இதற்கும் அனிருத்துக்கும் சம்பந்தம் இல்லை. இது என் பாடல். அவரை இழுக்க வேண்டாம். எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் .ஒரு படமோ பாடலோ நான் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் போது நீங்கள் என்னை கேள்வி கேட்கலாம். சர்ச்சைக்குரிய பீப் பாடல் எந்த திரைப்படத்திலும் வரவில்லை, தொலைக்காட்சி வானொலியில் ஒலிபரப்பாகவில்லை. பிறகு என்னிடம் கேள்வி கேட்பது ஏன்? சென்ஸாரில் சின்ன கெட்டவார்த்தைகளை கூட நீக்க சொல்லி விடுவார்கள், அதை மனதில் வைத்து தான் இதில் பீப் பயன்படுத்தினேன். வேடிக்கையாகத் தான் அந்த முயற்சியை செய்தேனே தவிர அது இறுதியான யோசனை அல்ல. நான் விளையாட்டாக வீட்டில் வைத்திருந்ததை எடுத்து யாரோ பொதுவெளியில் விட்ட தற்கு என்னை கேள்வி கேட்கலாமா? சமை த்துக் கொண்டிருக்கும் உணவை திருடிவிட்டு நன்றாக இல்லை என சொல்வது போல இருக்கிறது. சமைத்து முடித்தவுடன் தானே அசல் சுவை தெரியும். இந்தப் பாடல் குழந்தைகளிடம் போய் சேர்கிறது என சொல்லாதீர்கள். தொலைக்காட்சியில் வந்தால் தான் குழந்தைகளிடம் சென்றடையும். இணையத்தில் ஆபாச தளங்கள் கூடத்தான் இருக்கின்றன. அவை குழந்தைகளை சென்றடையாதா? என் பாடல் மட்டும்தான் குழந்தைகளிடம் போய் சேருமா?
பெண்ணை அடி, உதை என சொல்லும் பாடல்களை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் பெண்களை திட்ட வேண்டாம், உன்னை நீயே திட்டிக்கோ என்றுதான் எழுதியுள்ளேன். பெண்களை திட்ட வேண்டாம் என்பதே என் பாடலின் கரு. பெண்களுக்கு ஆதரவான இப் பாடலை எதிர்ப்பது கஷ்டமாக இருக்கிறது. எனக்கு பெண் ரசிகைகள் தான் அதிகம். இதை தேவையில்லாமல் திரித்துவிட்டு சிம்பு என்ற தனிமனிதனுக்கு எதிராக திருப்பிவிட்டிருக் கிறார்கள்.இனி மேல் என் இமேஜ் கெட்டுப்போக எதுவுமில்லை. ஏற்கனவே நிறைய காயப்படுத்தி விட்டார்கள். அதையும் மீறி நான் இன்று உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் கூட என் பெண் ரசிகைகள்தான். அவர்களின் ஆதரவு தான். பலாத்கார வழக்கில் சிக்கியவன் விடுதலையாகிறான். ஆனால் நான் செய்யாத தவறுக்கு அந்தப் பாட்டைக் கூட சரியாக கேட்காமல் உருவ பொம்மை எரிப்பு என போராட்டம் செய்வது ஏன் என்று தெரியவில்லை என உருக்கமாக தெரிவித்திருந்தார் .
இதேவேளை தாங்கள் பாடலை வெளியிடவில்லை. தங்களுக்கு வேண்டப்படாத யாரோ இதுபோன்று மோசடி வேலைகளில் இறங்கி விட்டனர். ஆயினும் இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும், என் மகனை தூக்கி லிட வேண்டும் என்கிறீர்கள். தூக்கில் போடுமளவு என் மகன் என்ன செய்தான். உங்க ளுக்கு என் பையன்தானே வேண்டும், எந்த பொலிஸிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கிறோம் எடுத்துக் கொள்ளுங்கள். எங்களை விட்டுவிடுங்கள். தமிழ்நாட்டை விட்டு சென்று வேறு எங்காவது போய் பிழைத்து கொள்ளுகின்றோம்.
பீப் பாடல் பெண்களின் மனதை புண்படுத்தியிருந்தால் நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். நாங்கள் இதை வெளியிட்ட வர்களை கண்டுபிடிக்கச் சொல்லி முறைப்பாடு கொடுத்தோம். அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் சிம்புவின் மீது வழக்கு பதிவு செய்து விரட்டுகின்ற னர். சிம்பு என்ன குற்றம் செய்தார்? பொதுநிகழ்ச்சியிலோ, படங்களிலோ, பேட்டியிலோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா? எதுவுமே இல்லை. அவரோ சின்ன பையன், அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. வீட்டில் நண்பர்களுடன் விளையா ட்டாக பண்ணிய பாடல், அதுவும் 'பீப்' போட ப்பட்டு இறுதியில் தேவையில்லை என்று தூக்கிப் போடப்பட்ட பாடல். இதனால், எங்களுக்கு நிம்மதியில்லை. எந்த நேர மும் வீட்டின் முன்பு பொலிஸ் இருக்கிறது. 24 மணி நேரமும் வீட்டின் முன்பு கெமராவும் கையுமாக ஆட்கள் இருந்தால் எங்களுக்கு என்ன நிம்மதி இருக்கிறது. என் மகனை தூக்கிலிட வேண்டுமானால் என்னை தூக்கி லிட்டபின் அவரை தூக்கிலிடுங்கள் என்று சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தரும் உரு க்கமாக தெரிவித்திருந்தனர்.
உண்மையில் வேண்டுமென்றே இப்பாடலை சிம்புவுக்கு எதிராக இணையத்தில் கசிய விட்டிருப்பின் அவர்கள் யாரென்று இதுவரை அறியப்படவில்லை. அந்தளவு அவரை பழிவாங்கும் நோக்கில் தமிழ் சினிமாவில் யார் உள்ளனர் என்பதும் கேள்வி க்குறியே...
இதேவேளை, யூரியூப்பில் பாடலை வெளியிட்டது யார் என்ற விபரத்தை தெரிந்து கொள்வதற்காக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் பீப் பாடலை வெளியிட்டதன் பின் னணி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியது. அதாவது, பாடல் பாடப்பட்டு அதன் இசை அமைப்பு நிறைவடைந்தவுடன் அனிருத் தனது பாடலை நட்பு ரீதியிலும், விளையாட்டு ரீதியிலும் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கு அனுப்பியதாகவும், அவர் பாடலின் பாதிப்பு புரியாமலும், தன்மை தெரியாமலும் விளையாட்டுத்தனமாக அந்த பாடலை தனது நண்பர்கள் சிலருக்கு பகிர்ந்துள்ளார். அவர்கள் மற்ற நண்பர்களுக்கு பகிர, யூடியூப்பிலும் சிலர் பகிர்ந்துள்ளனர். அதன் பிறகு வாட்ஸப், பேஸ் புக் என உலகம் முழுவதும் பாடல் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆயினும். இதில் சிவகார்த்திகேயனை சம்பந்தப்படுத்த வேண்டாம் என சிம்பு தரப்பு மறுத்துள் ளது.
இந்நிலையில் தற்போது, 5 தனிப்படைகள் அமை த்து சிம்புவை கைது செய்வதற்கான முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிம்பு தனக்கு முன் பிணை கோரியமைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், சிம்புவுக்கு முன் பிணை வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் சிம்புவை கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து சைபர் கிரைம் பொலிஸார் சிம்புவை கைது செய்ய தற்போது 5 தனிப்படை அமைத்துள்ளனர். நெரு ங்கிய நண்பர்கள் வீடுகளில் சிம்பு பதுங்கி இருக்கிறாரா எனவும் தேடப்பட்டு வருகிறது. மேலும், டில்லி, மும்பை, ஹைதராபாத்தில் உள்ள சினிமா வட்டார நண்பர்கள் வீடுகளின் பட்டியலையும் பொலிஸார் விசாரித்து, கண்காணித்து வருகின்றனர்.
இதேவேளை சிம்புவின் பல திரைப்படங் கள் இதனால் முடங்கியுள்ளன.
சிம்பு கைவசம் ‘இது நம்ம ஆளு, வேட்டை மன்னன், அச்சம் என்பது மடமையடா’ என்ற 3 திரைப்படங்கள் உள்ளன. இவற்றில் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலை யில். ஒரு பாடல் காட்சி மட்டும் நிறைவடையாமல் உள்ளது. ‘வேட்டை மன்னன்’ படம் பாதியில் நிற்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா’ வெற்றிக்கு பின் கௌதம் மேனனின் இயக்கத்தில் தற்போது சிம்பு நடித்துக்கொண்டிருக்கும் ''அச்சம் என்பது மடமையடா'' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் அது வும் தடைப்பட்டுள்ளது. இதேவேளை கனடாவிற்கு இசைநிகழ்ச்சி நடத்த சென்ற அனிருத் நாடு திரும்ப முடியாத நிலையில் அங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. வேதாளம் மூலம் மிகப்பெரிய ஹிட் பாடல்களை இறுதியாக வழங்கிய அனிருத் பல திரைப்பட வாய்ப்புகளை இழந்துவருகிறார். தற்போது அவரது இசையில் வெளிவர வேண்டிய பல திரைப்படங்கள் அவரது கை யை விட்டு சென்றுள்ளன.
சூர்யாவை வைத்து ஹரி இயக்கி வரும் சிங்கம்–3, தனுஷ் நடிக்கும் கொடி படங்களுக்கும் அனிருத்தை ஒப்பந்தம் செய்து இருந்தனர். மேலும் 3 புதிய தமிழ் படங்களிலும் 2 தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தம் செய்ய அவருடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் பீப் பாடல் சர்ச்சையினால் திடீரென்று சிங்கம்–3 படத்தில் இருந்து அவரை நீக்கி விட்டனர். மேலும் 2 புதிய படங்களில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார். தனுஷின் ‘கொடி’ படத்தில் இருந்தும் அவரை நீக்குவதா? வேண்டாமா? என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீப் பாடல் பிரச்சினை தொடர்பாக அவர் சென்னை திரும்பாமல் தொடர்ந்து கனடாவிலேயே தங்கி இருப்பதால் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களுக்கு இசையமைக்க முடியாமல் முடங்கியுள்ளன. இவ்வாறு சிம்பு அனிருத்தின் 6 திரைப் படங்கள் முடங்கி உள்ளன.
பீப் பாடலினால் அனிருத்தை விட சிம்புவிற்கே அதிகமான அழுத்தங்கள் வலுத்துள்ளன. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகியதோடு கௌரவமான குடும்ப பின்னணி கொண்ட சிம்பு விளையாட்டாக செய்ததாக கூறப்படும் இவ்விடயம் அவரது வாழ்க்கையையே தற்போது திசை திருப்பியுள்ளது. இதனால்தான் நம் முன்னோர்கள் விளையாட்டு வினையாகும் என்று தெரிந்தே பழமொழி கூறியிருக்கின்றனர் போல... சிம்புவும் அவரது குடும்பத்தாரும் பகிரங்கமாக இதற்கு மன்னிப்பு கேட்ட பின்னரும் அவரை தமிழகம் விடுவதாகஇல்லை. அந் தளவு சிம்பு செய்தது மன்னிக்க முடியாத குற்றமா...? இது வேறு ஏதும் பழிவாங்கலா?
டுவிட்டரில் பிரபலங்களுக்கு வழங்கப் படும் குறியீட்டு இலச்சினை கூட சிம்புவின் கணக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதை விட பாரிய பிரச்சினைகள் எழுந்த போது மௌனம் காத்த நடிகர் சங்கம் கூட இப் பிரச்சினையில் சிம்புவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலின் தாக்கமாக கூட இருக்கலாம்.
இந்தியாவில் தீர்க்கப்படாத எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன.அதை எல்லாம் கண்டுகொள்ளாதவர்கள், பீப் பாடலுக் காக தனிப்பட்ட ரீதியில் சிம்பு என்ற தனி மனிதனுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை வேடிக்கையாக இருக்கிறது.
இறுதியாக ஒன்று பாலியல் துஷ்பிர யோகம் செய்தவர் விடுதலையாவதற்கும் தனது வீட்டில் தான் பாடிய பீப் பாடலுக்காக ஒருவரை தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பதற்கும் தனிப்படை அமைத்து கைது செய்ய நடவடிக்கை எடுப் பதற்கும் நேரகாலம் காரணமா... அல்லது வேறு ஏதும் உள் நோக்கமா என்று பொறுந் திருந்துதான் பார்க்க வேண்டும்.....
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM