நேபாளத்திற்கு பதிலடி கொடுத்து சம்பியனானது இந்தியா

Published By: Digital Desk 4

14 Sep, 2022 | 10:27 PM
image

(நெவில் அன்தனி)

நேபாளத்திற்கு எதிராக கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இந்தியா, 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட  (SAFF)வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத அணியாக களம் இறங்கிய நேபாளம் சம்பியனாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய இந்தியா வெற்றியீட்டி சம்பியனானது.

No description available.

இந்த வெற்றியின் மூலம் முதல் சுற்றில் நேபாளத்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்தியா நிவர்த்தி செய்து கொண்டது.

No description available.

இலங்கையில் முதல் தடவையாக நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியில் பாகிஸ்தானைத் தவிர மற்றைய 6 தெற்காசிய நாடுகளும் பங்குபற்றின.

நேபாளத்துடனான இறுதிப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இந்தியா இடைவெளையின்போது 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

No description available.

போட்டி ஆரம்பித்ததும் நேபாளத்தின் ஆதிக்கம் வெளிப்பட்டது. இந்திய கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்த நேபாளத்தினால் கோல் எதுவும் போட முடியாமல் போனது.

எவ்வாறாயினும் அதன் பின்னர் திறமையாக விளையாடிய இந்தியா 18ஆவது நிமிடத்தில் பொபி சிங் மூலம் முதலாவது கோலை போட்டது.

தொடர்ந்து நேபாள கோல் எல்லையை ஆக்கிரமித்த இந்தியா 2ஆவது கோலை கொரவ் சிங் மூலம் போட்டது.

போட்டியின் 39ஆவது நிமிடத்தில் நேபாள அணித் தலைவர் பிரசாந்த லக்சாம்,  இந்திய வீரர் ஒருவரை முரட்டுத்தனமாக வீழ்த்தி முதுகில் தாக்கியதால் மத்தியஸ்தரின் நேரடி சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.

இதனைத் தொடர்ந்து 10 வீரர்களுடன் விளையாடிய நேபாளம் நெருக்கடியை எதிர்கொண்டது.

இடைவேளையின் பின்னர் தொடர்ந்து திறமையாக விளையாடிய இந்தியா போட்டியின் 63ஆவது நிமிடத்தில் தனது கோல் எண்ணிக்கையை 3ஆக உயர்த்தியது. அணித் தலைவர் வன்லால்பெக்கா குவிட்டே அந்த கோலைப் போட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா மாற்று வீரர்களை அடுத்தடுத்து களம் இறக்கியது.

அதேவேளை, நேபாளம் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தது. ஆனால் இந்தியாவின் பின்கள வீரர்களும் கோல்காப்பாளரும் அவற்றை தடுத்தனர்.

இறுதியில் போட்டி உபாதை ஈடு நேரத்திற்குள் சென்ற பின்னர் மாற்றுவீரர் அமான் கோல் போட்டு இந்தியாவின் கோல் எண்ணிக்கையை 4ஆக உயர்த்தினார்.

இந்த சுற்றுப் போட்டியில் சிறந்த கோல் காப்பாளருக்கான தங்க கையுறையை சஹில் வென்றெடுத்தார்.. அதிக கோல்களைப் போட்ட வீரருக்கான தங்கப் பந்து விருது பங்களாதேஷின் மிரா{ல் இஸ்லாமு க்கு வழங்கப்பட்டதுடன் சுற்றுப் போட்டியின் சிறந்த வீரருக்கான தங்கப் பாதணி விருது இந்திய அணித் தலைவர் வன்லால்பெக்கா குவிட்டேக்கு சொந்தமானது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08