நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத்திட்டமே இது ; மஹிந்தானந்த

Published By: Ponmalar

16 Nov, 2016 | 09:57 PM
image

2017 ஆம் ஆண்டுக்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் வரி விதிப்பதிலும், அரச சொத்துகளை தனியார் மயப்படுத்துவதிலும்தான் பிரதான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத்திட்டமாக இது அமையவுள்ளதாக மஹிந்தானந்த அழுத்கமமே எம்.பி. தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்துதான் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டன. என்றாலும் குறித்த இரு கட்சிகளும் இணைந்து 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளதா என்ற சந்தேகம் எமக்குள்ளது. ஏனெனில் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல யோசனைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளாகவே அமைந்துள்ளது.

வரி விதிப்பதிலும், அரச சொத்துகளை தனியார்மயப்படுத்துவதிலும்தான் அரசாங்கத்தின் பிரதான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் வருமானம் பெறுவதனையுமே இலக்காகக்கொண்டுள்ளனர். 

இருந்தபோதிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒருபோதும் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரப்போவதில்லை. ஏனெனில் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் ஏற்பட்ட மோசடி மூலம் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அத்துடன் நிதியமைச்சர் மீதும் எவரும் நம்பிக்கை வைக்கப்போவதில்லை. அவருக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.    

ஆகவே அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கும் இலக்கினை அடைய முடியாது. ஆதலினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத்திட்டமாக  அமையவுள்ளது. அரசாங்கத்தின் இறுதிக்காலம் இது என்பதை அரசாங்கத்திலுள்ளவர்களும் நன்கு அறிந்துகொண்டுள்ளனர். அதனால்தான் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51