ஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பு ; ஜோன் அமரதுங்க  

Published By: Ponmalar

16 Nov, 2016 | 08:16 PM
image

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனத்தெரிவித்த சுற்றுலாத்துறை ,கிறிஸ்தவ விவகாரங்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க வடக்கில் மீண்டும் எந்தவொரு வன்முறையும் உருவாவதற்கு இடமளிக்க முடியாது எனவும் உறுதிபடத்தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நான்காம் நாள் விவாதத்தின் ஆரம்ப உரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எஸ். சிறிதரன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து ஆளும் தரப்பில் உரையாற்ற ஆரம்பித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிடுகையில் ,

தற்போதைய தேசிய  அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை இயற்றி நியாயபூர்வமான முன்னெடுப்புகளை உறுதிசெய்யும். அனைத்து விடயங்களிலும் நாம் நியாயபூர்வமான செயற்பாடுகளையே மேற்கொள்வோம். 

குறிப்பாக ஐக்கிய இலங்கைங்கைக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதை உறுதிபடக் கூறுகின்றோம். வடக்கில் காணிகள் மீளவும் கையளிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை  வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

முன்னைய அரசாங்கம் இழைத்த செயற்பாடுகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது. ஆனால்  அவ்வாறான விடயங்கள் மீண்டும் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது. தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க நாம் செயற்படுவோம். குறிப்பாக அமைதியான முறையில் அனைத்தும் மேற்கொள்ளப்படும். வடக்கில் மீண்டும் எந்தவொரு வன்முறையும் உருவாவதற்கு இடமளிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51