ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அர்த்தபூர்வமான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களிற்கான வாய்ப்பில்லை என அரகலய செயற்பாட்டாளரான சட்டத்தரணிநுவான் போபகே ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 வது அமர்வில் உரையாற்றிய சட்டத்தரணி நுவான் போபகே ஆர்ப்பாட்டங்களிற்கு எதிரான அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அர்த்தபூர்வமான மனித உரிமைகள் ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல்களிற்கான வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் என்னையும் பல ஆர்ப்பாட்டக்காரர்களையும் கைதுசெய்து சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்துள்ளனர்என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மாணவ செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர், என தெரிவித்துள்ள நுவான் போபகே பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என்ற தனது வாக்குறுதிக்கு முரணாணக அரசாங்கம் செயற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி என்பது நீண்ட கால பிரச்சினைகளின் தொடர்ச்சி என தெரிவித்துள்ள நுவான் போபகே மனித உரிமை மீறல்கள்- ஒட்டுமொத்த யுத்தகால அநீதிகளிற்கு பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்காக ,அரசாங்கம் முக்கிய பொறுப்புக்கூறும் நடைமுறைகளை சட்டத்தின் ,ஆட்சியை மனித உரிமை ஸ்தாபனங்களின் சுதந்திரம் ஆகியவற்றை திட்டமிட்டு அழித்தமை , ஊழல் அதிகார துஸ்பிரயோகம் தொடர்ச்சியாக பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்தல் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது இவையே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிற்கு எங்கிருக்கின்றார்கள் என்பதற்காக தொடர்ந்து போராட்டங்களி;ல ஈடுபட்டுள்ள நிலையில் துன்புறுத்தலை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM