(எம்.ஆர்.எம்.வசீம்)
மருந்துப் பொருட்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை சுகாதார துறையின் குறித்த பிரிவு ஏற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் சுகாதார அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கும்போது மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் உயிர் ஏனைய அனைத்து விடயங்களையும் விட பெறுமதியானதாகும். அதனால் சம்பிரதாய சட்டங்களை இலகுபடுத்தி அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் விரைவாக மேற்கொள்ளவேண்டும்.
மருந்துப் பொருட்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை சுகாதார துறையின் குறித்த பிரிவு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன் மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் பெற்றுக்கொடுக்கும்போது மருத்துவ விநியோகப்பிரிவு தேவையான தகவல்களை முறையாக புதுப்பித்து, எந்த தட்டுப்பாடும் இல்லாமல் மக்களுக்கு தேவையான மருந்துப்பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கும் பூரண பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்காக ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்தியில் சிறந்த தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்ளும்போது சர்வதேச மட்டத்தில் பெற்றுத்தரப்படும் கடன் அல்லது நன்கொடைகளை முறையாக செலுத்துவது தொடர்பில் அதிகாரிகள் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்தவேண்டும்.
இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஏற்படும் மந்த கதியிலான நடவடிக்கை,பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாகலாம். அத்துடன் நோயாளர்களுக்கான தேவையான மருந்து முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்துகொள்வதற்கும் அவற்றை முறையாக பங்கிடுவதற்காக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM