வாழைச்சேனையில் இரு தினங்களில் 5 வீடுகள் உடைத்து 40 பவுண் நகை, பணம் கொள்ளை

Published By: Vishnu

12 Sep, 2022 | 08:44 PM
image

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கடந்த இரு தினங்களில் 5 வீடுகள் உடைக்கப்பட்டு பல இலச்சம் ரூபா பெறுமதியான 40 பவுண்கள் கொண்ட தங்க ஆபரணங்கள், பணம், மற்றும் கையடக்க தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை (12) வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண்ஒடை பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிக்கு  வீட்டை பூட்டிவிட்டு சிறுவர் பாடசாலை ஒன்றில் நிகழ்வுக்காக சென்று 9.45 மணியளவில் வீடு திரும்பியபோது பூட்டியிருந்த வீட்டின் யன்னல்கதவை உடைத்து உட்புகுந்து அங்கிருந்த 16 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

அதேவேளை 10 ஆம் திகதி சனிக்கிழமை ஓட்டுமாவடியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து வீட்டிற்கு உட்புகுந்து அங்கிருந்த ஏ.ரி.எம். வங்கி அட்டையை திருடிக் கொண்டு சென்று குருநாகல் பகுதியில் அந்த வங்கி அட்டையை கொடுத்து பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது 

இதனை தொடர்ந்து நாவலடி பிரதேசத்தில் பிரதேச சமுர்த்தி தலைவர் ஒருவரின் பூட்டியிருந்த வீட்டை உடைத்து அங்கிருந்த கையடக்க தொலைபேசி 32 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் இன்னொரு வீட்டின் கதலை உடைத்து அங்pருந்த கையடக்க தொலைபேசி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது 

இவ்வாறு வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரையில் இரு தினங்களில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது 

இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03