(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பெண்கள் உட்பட 10 பேரை கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மாவட்டத்தில் உள்ள சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், அரசியல்வாதிகள், ஒரு சில ஊடகவியலாளர்கள், பெண்கள், சழுக செயற்பாட்டாளர்கள் உட்பட 10 பேரை முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு கடந்த வாரம் தொடக்கம் ஒவ்வொருவருக்கும் திகதி குறிப்பிட்டு தமது காரியாலயத்துக்கு வருமாறு கடிதங்களை அவர்களது வீடுகளுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சென்று கையளித்துள்ளனர்.
இந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒவ்வொருவருக்கு திகதி குறிப்பிட்டு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் குறிப்பிட்ட திகதிகளில் கொழும்பிலுள்ள அவர்களது காரியாலயத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்கிவருவதாகவும் இது இவர்களுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைக்கப்பட்வர்கள் பலபேர் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM