மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் இருவர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மே 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னர் நடைபெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேகநபர்கள் ஹொரனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஹொரனை மாநகர மேயர் வீட்டிற்கும், மற்றும் குருநாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குருநாகல் பிரதேச சபை தலைவர் வீடு மற்றும் அவரின் கடை தொகுதிக்கு சேதம் விளைத்தமை தொடர்பில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 44 மற்றும் 37 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் ஹொரனை மற்றும் தொரட்டியாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் ஹொரனை மற்றும் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM