ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ளும்- தாரக பாலசூரிய

Published By: Vishnu

11 Sep, 2022 | 08:30 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ளும்.

சர்வதேசத்துடன் அரசாங்கம் இணக்கமாகவே செயற்படும். சட்ட ஒழுங்கை பாதுகாக்க சட்டத்தை அமுல்படுத்துவதை அரச பயங்கரவாதம் என எவ்வாறு குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்களின் பேச்சுரிமையினையும், அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும் அரசாங்கம் ஒருபோதும் முடக்கவில்லை.  ஜனநாயகம் என்ற பெயரில் சட்டத்திற்கு முரணாக வன்முறையில் ஈடுப்பட எவருக்கும் இடமளிக்க முடியாது.

காலி முகத்திடல் போராட்டத்தில் ஒரு தரப்பினர் ஜனநாயக ரீதியில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். ஜனநாயக போராட்டத்தை பிறிதொரு தரப்பினர் ஜனநாயகத்திற்கு முரனாக செயற்பட்டார்கள். பொதுச்சட்டத்தையும், சட்ட ஒழுங்கையும் பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ளும்.நாட்டின் பொதுச்சட்டத்திற்கமையவே அரசாங்கம் செயற்படும்.சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்படுவது அத்தியாவசியமானது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தை ஒருபோதும் பகைத்துக்கொள்ள மாட்டார். சர்வதேசத்தின் ஒத்துழைப்பை கோரி நிற்கும் போது சர்வதேசத்தை பகைத்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை எவ்வாறு அரச பயங்கரவாதம் என குறிப்பிடுவது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளோம். அனைத்து நெருக்கடிக்களுக்கு மத்தியிலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16
news-image

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர்...

2025-04-26 10:07:52
news-image

இன்றைய வானிலை

2025-04-26 06:12:09