10 முதல் 12 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் : இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை

Published By: Vishnu

11 Sep, 2022 | 08:25 PM
image

(எம்.மனோசித்ரா)

அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை உரிய நேரத்தில் இறக்குமதி செய்யவில்லை எனில் ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு பின்னர் நாளாந்தம் 10 - 12 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமுல்படுத்த வேண்டியேற்படும் என்று இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்தார்.

நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் கொழும்பில் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நிலக்கரி பிரச்சினை தொடர்பில் நாம் தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வந்தோம். விரைவில் அதனை இறக்குமதி செய்யுமாறும் தொடர்ந்தும் வலியுறுத்தினோம்.

தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி மூலம் ஒக்டோபர் 20 - 25 ஆம் திகதி வரை மாத்திரமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

அதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்மெனில் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

4.5 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது. இந்த விலைமனு கோரல் உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாவிட்டால் தேவையான நேரத்தில் நிலக்கரியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையும் ஏற்படும்.

ஒக்டோபர் 20 ஆம் திகதி வரையேனும் இந்த நிலக்கரிதொகையை வைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் 3 இயந்திரங்களினதும் செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டியேற்படும்.

நிலக்கரி மின் உற்பத்தி தடைபடுமானால் நீர் மூலம் அல்லது எரிபொருள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நேரிடும். தற்போது மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறுவதால் ஓரளவு நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

எவ்வாறிருப்பினும் மழை வீழ்ச்சியும் குறைவடைந்து , எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படுமாயின் நாளாந்தம் 10 - 12 மணித்தியால மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசுக்கு ஏப்ரல் 21 வரை...

2025-03-16 09:20:32
news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-16 09:16:46
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-16 09:15:54
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-16 09:13:26
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59