மாத்தறை அக்குரஸ்ஸ, மடோல பிரதேசத்தில் நேற்றிரவு (10) நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட காணி தகராறு, கைகலப்பாக மாறியதில், அண்ணன் தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு உயிரிழந்தவர் தனது மனைவியுடன் பெற்றோர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மூத்த சகோதரர் மேலும் 3 பேருடன் அந்த வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அங்கு இருவருக்கும் இடையே காணி தொடர்பான தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறி சென்றதையடுத்து மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தால் அந்த நபரை தாக்கியுள்ளார்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM