(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னிலை உறுப்பினர்கள் உட்பட கூட்டணியின் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளடங்களாக 12 பேருக்கு அமைச்சரவை அமைச்சுக்களை வழங்கி நிலையான அமைச்சரவையை நியமிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் இம்மாத காலத்திற்குள் இராஜாங்க அமைச்சினையும்,நியமிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொடர்ச்சியாக ஜனாதிபதியிடம் வலியுறுத்தியது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக 37 பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறான பின்னணியில் நிலையான அமைச்சரவை நியமிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ,ரோஹித அபேகுணவர்தன,சி.பி ரத்நாயக்க,பவித்ரா வன்னியராட்சி,ஜனக பண்டார தென்னகோன்,எஸ்.பி.திஸாநாயக்க,சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன, விமலவீர திஸாநாயக்க,ஜோன்ஷ்டன் பிரனாந்து உள்ளடங்களாக 10 பெயரை பொதுஜன பெரதுன அமைச்சரவை அமைச்சுக்காக பரிந்துரைத்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்,பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஆகியோருக்கும் நிலையான அமைச்சரவையில் அமைச்சு பதவிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை மாதம் 18 அமைச்சுக்களை உள்ளடக்கிய வகையில் தற்காலிக அமைச்சரவையை நியமித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி,மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களையும்,ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய நிலையான அமைச்சரவையை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM