bestweb

எமது கட்சி உறுப்பினர்கள் சுயலாபத்திற்காகவே அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர் - சுதந்திரக்கட்சி கவலை

Published By: Digital Desk 4

09 Sep, 2022 | 10:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீசு.க உறுப்பினர்கள் சுயலாபத்திற்காகவே அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர் - சுதந்திரக்கட்சி கவலை

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக தங்களின் சுய இலாபத்திற்காக அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தேசிய மற்றும் சர்வதேசத்தின் வலியுறுத்தலுக்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் அனுமதி இல்லாமலேயே அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

சர்வக்கட்சி அரசாங்கம் அல்லது சர்வக்கட்சி நிர்வாகம் தோற்றம் பெறுமாயின் அந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவிகயை ஏற்று,ஒத்துழைப்பு வழங்க மாத்திரமே கட்சி செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தங்களின் சுய இலாபத்திற்காக அரசாங்கத்துடன் ஒன்றிணைந்துள்ளமை கவலைக்குரியது.

தேசிய மற்றும் சர்வதேச தரப்பினரால் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்த இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் யோசனையை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆரம்பத்தில் முன்வைத்தது.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன நிலையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை கொண்டு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கான நியமனங்களை வழங்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு கவலைக்குரியதாகும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என தேசிய மற்றும் சர்வதேசத்தின் வலியுறுத்தலை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை...

2025-07-18 10:23:21
news-image

நான்கு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

2025-07-18 10:12:33
news-image

தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத...

2025-07-18 10:14:53
news-image

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில்...

2025-07-18 10:07:11
news-image

கடத்தப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்

2025-07-18 09:27:11
news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19