அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வங்கிக் கணக்கில் 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டதால் அவர் உலகின் 25 ஆவது மிகப் பெரிய செல்வந்தரானார். எனினும், அவரின் அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. வங்கியின் தவறினாலேயே அவரின் கணக்கில் இவ்வளவு பெருந்தொகை வைப்புச் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு, அக்கணக்கிலிருந்து பணம் அகற்றப்பட்டது.
லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த டெரன் ஜேம்ஸ் என்பவருக்கே இந்த விநோத அனுபவம் ஏற்பட்டது.
ெடரன் ஜேம்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரின் மனைவி, ஜேம்ஸின் வங்கிக் கணக்கில் 50,000,000,000 டொலர் (5,000 கோடி டொலர்) வைப்புச் செய்யப்பட்டதாக தொலைபேசிக்கு தகவல் வந்துள்ளதாக தெரிவித்தார்.
இத்தகவலை அறிந்து டெரன் ஜேம்ஸ் பெரும் வியப்படைந்தார். அவரின் குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களும் பெரும் வியப்படைந்தனர்.
தற்போதைய நிலையில், ஒருவர் 5,000 கோடி டொலர்களுக்கு அதிபதியானால், அவர் உலகின் 25 ஆவது மிகப் பெரிய செல்வந்தராக இருப்பார். 5,000 கோடி டொலர்கள் என்பது பிரிட்டனின் புகழ்பெற்ற தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்ஸனின் சொத்து மதிப்பைவிட 10 மடங்கு அதிகமாகும்.
'அப்பணம் எங்கிருந்து வந்திருக் கும் என நான் யோசித்தேன். எனக்கு அத்தொகை அபத்தமாக தெரிந்தது. ஏனெனில் ஒரு இலக்கத்தின் பின்னால் இத்தனை பூச்சியங்களை தான் ஒருபோதும் கண்டதில்லை' என நேர்காணல் ஒன்றில் டெரன் ஜேம்ஸ் கூறினார்.
அப்பணத்தை பயன்படுத்திக் கொள்ளாமல், இது குறித்து அவர் வங்கிக்கு அறிவித்தார்.
அதையடுத்து பணத்தை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை வங்கி மேற்கொண்டது.
3 தினங்கள் மாத்திரமே மேற்படி பணம் அவரின் வங்கிக் கணக்கில் இருந்தது. அதன் பின் கணக்கிலிருந்து பணம் மறைந்தது.
தமது தவறொன்று காரணமாக ஜேம்ஸின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பீடு செய்யப்பட்டிருந்ததாக அவ்வங்கி தெரிவித்தது.
இது தொடர்பாக டெரன்ஜேம்ஸ் மேலும் கூறுகையில்,
'நாம் அப்பணத்தை செலவிட முற்படவில்லை. அது எமது பணம் அல்ல என்பது எமக்குத் தெரியும். உண்மையான உரிமையாளரிடம் அப்பணம் சென்றடைய வேண்டும் என நான் விரும்பினேன். அதனால் வங்கியுடன் தொடர்புகொண்டேன்.
ஒரு சனிக்கிழமை, வங்கிக் கணக்குக்கு அப்பணம் வந்தது. அடுத்த செவ்வாய்க்கிழமை. வங்கிக் கணக்கிலிருந்து பணம் அகற்றப்பட்டுவிட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM