பிரிட்டனைச் சேர்ந்த ஆண் ஆசிரியர் ஒருவர், இரகசிய கெமரா மூலம் பாடசாலை மாணவிகளை இரகசியமாக படம்பிடித்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
31 வயதான ஜெப்ரி வில்சன் எனும் இந்த ஆசிரியர், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பிராந்தியத்திலுள்ள இரு பாடசாலைகளில் பணியாற்றியபோது இவ்வாறு மாணவிகளை இரகசியமாக படம்பிடித்தார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இவர் 6 மாத காலத்தில் பிடித்த 45 படங்களை பொலிஸார்; இவ்வருட முற்பகுதியில் கைப்பற்றினர்.
அத்துடன் சிறார்களின் சுமார் 53,000 ஆபாசப்படங்கள், வீடியோக்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவர் பேனாவில் பொருத்தப்பட்ட கெமராவை பயன்படுத்தி மாணவிகளை இரகசியமாக படம்பிடித்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி பேனாவுடன் கெமரா பொருத்தப்பட்ட சுவர் கடிகாரத்தையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வழக்கை விசாரித்த பீட்டர்பரோஹ் கிரவுண் நீதிமன்றம், வில்சனுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துது. அத்துடன் அவர் 10 வருடகாலம், பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், 'இந்த உண்மையில் கலக்கமடையச் செய்யும் வழக்கு. நம்பிக்கை கொள்ளச் செய்யும் ஒரு பதவியில் இருந்துகொண்டு, தனது சுயலாபத்துக்காக அந்த நம்பிக்கையை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அவரின் குற்றச்செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அவர் நீதியை எதிர்கொண்டுள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM