இங்கிலாந்தின் 19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீராங்கனை ஒருவர், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஃபெய் டன் எனும் இப்பெண், வெற்றிகரமான வர்த்தகராகவும் விளங்கினார். இங்கிலாந்து கனிஷ்ட அணியில் நம்பிக்கையளிக்கும் வீராங்கனையாக விளங்கிய அவர், கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், லிவர்பூல் நகரில் கால்பந்தாட்ட பயிற்சி நிலையமொன்றையும் ஸ்தாபித்தார்.
தற்போது அவருக்கு 38 வயதாகுகிறது. இந்நிலையில், கஞ்சா போதைப்பொருள் கடத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
10 இலட்சம் இறாத்தல் கஞ்சா கடத்தல் நடவடிக்கையில் அவருக்கு தொடர்பிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
கஞ்சா உற்பத்தியுடன், விநியோக நடவடிக்கையில் சம்பந்தப்பட்டதுடன், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் கணக்காளராகவும் அவர் பணியாற்றியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கப்பலொன்றில் ஸ்பெய்னுக்கு பயணம் செய்தபோது, தனது காற்சட்டைகள் ஒளித்து வைத்து பணம் கடத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கஞ்சா விநியோகம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகளை ஃபெய் டன் ஒப்புக்கொண்டார்.
இவ்வழக்கை விசாரித்த லிவர்பூல் கிரவுண் நீதிமன்றம் ஃபெய் டன்னுக்கு 3 வருடங்கள் மற்றும் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இப்பெண்ணின் தந்தையான மைக்கல் டன்னும் (68) இப்போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனால் மைக்கல் டன்னுக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனது 18 வயதில், ஐரோப்பிய கால்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இங்கிலாந்து அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற உதவியவர் ஃபெய் டன்.
அச்சுற்றுப்போட்டியில் டென்மார்க், சுவிட்ஸர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அவர் கோல்களைப் புகுத்தினார்.
ட்ரான்மெயர் ரோவர்ஸ் கழகத்துக் காக விளையாடிய ஃபெய் டன், 2003 ஆம் அண்டு லீட்ஸ் யுனைடெட் கழகத்தில் இணைந்தார்.
2000 ஆம் ஆண்டு சௌத்தாம்டன் கழகத்துக்கு எதிரான போட்டியில் ஹெட்றிக் கோல்களையும் அவர் புகுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM