வட மாகாண மக்கள் இராணுவத்தினர் அவசியமென கருதுகின்றனர் - சரத்வீரசேகர

Published By: Digital Desk 3

08 Sep, 2022 | 03:54 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை அகற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே குறிப்பிட்டுக்கொள்கின்றனர்.  ஆனால் மாகாண மக்கள்  இராணுவத்தினர் அவசியம் என எண்ணுகிறார்கள் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவிட்டு வரி சட்டமூலம்  தொடர்பான விவாதத்தின் போதுஇ வடக்கில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளை தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறிய நிலையில், அதற்கு பதிலளிக்கையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டதாவது,

யுத்தக் காலத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பு காரணங்களுக்காக கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 வீதமானவை வடக்கு மற்றும் கிழ்கு மாகாண மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. மிகுதி காணிகளே பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இராணுவம் இருப்பது யாழ்ப்பாண மக்களுக்கு அவசியமாகும். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு மாத்திரமே இராணுவத்தினரை அங்கிருந்து அகற்ற வேண்டும் என குறிப்பிடுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு காரணிகளின் நிமித்தமே இராணுவத்தினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவம் தொடர்பில் அரசியல் தரப்பினரே தவறான கருத்துக்களை குறிப்பிட்டுக்கொள்கிறார்கள் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58