போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த ஒரு யுவதி, வெவ்வேறு தந்தையர்களைக் கொண்ட இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
19 வயதான இந்த யுவதி, தான் போர்த்துக்கலின் கொய்யஸ் மாநிலத்தின் மினேய்ரோய் நகரைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே தினத்தில் இரு ஆண்களுடன் இந்த யுவதி பாலியல் உறவு கொண்டதால் அவருக்கு வெவ்வேறு தந்தையர்களைக் கொண்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் இவ்வாறு இரு வேறு தந்தையர்களைக் கொண்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக பதிவான 20 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். இத்தகைய கருத்தரிப்பு
'ஹெட்ரோபேரன்டல் சுப்பர்ஃபெக்குன்டேசன்' (heteroparental superfecundation) என குறிப்பிடப்படுகிறது.
இக்குழந்தைகள் பிறந்து 8 மாதங்களின் பின், அவர்கள் இருவரினதும் தந்தை என இந்த யுவதி நம்பிய ஆண் மரபணு சோதனை நடத்தினார். ஆனால், ஒரு குழந்தைக்கு மாத்திரமே அவர் தந்தை என்பது மரபணு சோதனை மூலம் தெரியவந்ததாக அந்த யுவதி தெரிவித்துள்ளார்.
'இப்பெறுபேற்றை அறிந்து நான் வியப்படைந்தேன். இரு மகன்களும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருந்த போதிலும், இது எப்படி சாத்தியம் எனத் தெரிந்திருக்கவில்லை' என அவர் கூறினார்.
'குறித்த தினத்தில் நான் மற்றொரு ஆணுடனும் பாலியல் உறவு கொண்டமை நினைவில் உள்ளது. அந்நபரை அழைத்து மரபணு பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறினேன். அதில் 'நேர்மறை' பெறுபேறு கிடைத்தது' என அந்த யுவதி தெரிவித்துள்ளார்.
எனினும், இக்குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் அவர்களின் தந்தையாக ஒரு ஆணின் பெயர் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
'இரு குழந்தைகளையும் அவர் பராமரிக்கிறார். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர் வழங்குவதுடன் எனக்கும் மிகவும் உதவுகிறார்' எனவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண கர்ப்ப விவகாரம் குறித்து ஆராய்ந்த டாக்டர் டூலியோ ஜோர்ஜ் பிரான்கோ இது தொடர்பாக போர்த்துகல் ஊடகமொன்றில் விபரிக்கையில்,
'ஒரே தாயின் இரு முட்டைகள், இரு வேறு ஆண்களின் உயிரணுக்களால் கருத்தரிக்கப்படுவதால் இது நடைபெறுகிறது.
இப்பெண்ணின் கர்ப்பகாலம் பிரச்சினை எதுவுமின்றி சுமுகமாக இருந்தது. இரு ஆண் குழந்தைகளும் நலமாக உள்ளன. அவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் எதுவுமில்லை.
இத்தகைய கர்ப்பம் மிக அரிதானதாகும். ஒரு மில்லியனில் ஒன்றாகவே இது உள்ளது. எனது வாழ்க்கையில் நான் இத்தகைய ஒரு விவகாரத்தை நான் பார்ப்பேன் என நான் எண்ணியிருக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
மேற்படி குழந்தைகளுக்கு தற்போது ஒரு வருடம் மற்றும் 4 மாதங்கள் வயதாகும் நிலையில், இது குறித்து தகவல்களை மேற்படி மருத்துவர் இவ் வாரம் வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM