(எம்.வை.எம்.சியாம்)
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பணிப்பாளர் பிரிதி பொதுமுகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையர்கள் 280,772 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளார்கள். இதில் 126,148 ஆண்களும் 82,634 பெண்களும் இவ்வாறு வேலைவாய்ப்பு நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள்
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது தற்போது வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பிற்கு அதிக கேள்வி நிலவி வருகிறது. மேலும் இந்த மாதமளவில் சுமார் 400 க்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளார்கள்
அதன்படி இவ்வருட இறுதிக்குள் தென்கொரியாவிற்கு இலங்கையர்கள் 5,000 பேரை வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கு உத்திதேசிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வரையில் தென்கொரியாவிற்கு 2,885 பேர் சென்றுள்ளார்கள்.
இந்நிலையில், கடந்த காலங்களில் விமான சேவைகளில் சிக்கல்கள் இருந்த போதிலும் தற்போது அவை நிவர்த்தி செய்யப்பட்டு. இந்த மாதம் தொடக்கம் வாரத்திற்கு இரண்டு விமானங்களை நேரடி சேவையில் இணைப்பதற்கு ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM