உபாலி அபேரத்ன விசாரணை ஆணைக்குழு : சட்டமாதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் - சபை முதல்வர் சுசில்

Published By: Vishnu

07 Sep, 2022 | 01:46 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்)

உபாலி அபேரத்ன தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்தமாட்டோம். ஆணைக்குழுவின் அறிக்கை இரத்து செய்யப்படும் என சட்டமாதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவித்தால், தாக்கல் செய்துள்ள வழக்குகளை மீள பெறுவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அறிக்கையின் பரிந்துரையை செயற்படுத்துவதற்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,ஜனாதிபதியின் செயலாளர் உள்ளடங்களாக 10 பேர் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். வழக்கினை மீள பெறல் குறித்த யோசனையை சட்டமாதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அனைத்தையும் செய்து விட்டு தற்போது சட்டமில்லை என்கின்றீர்கள்,இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பல கோடி ரூபா செலவாகியிருக்கும்,செலவான நிதியை யாரிடமிருந்து அறவிடுவது என ராஜித சேனாரத்ன சபை முதல்வரிடம் வினவினார்.செலவான நிதி பற்றி எனக்கு தெரியாது என சபை முதல்வர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் 07 ஆம் திகதி புதன்கிழமை உபாலி அபேரத்ன தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்த விசேட கூற்றுக்கு சபை முதல்வர் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டதாவது,

அரசியல் பழிவாங்கள் தொடர்பில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை 2020ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

உபாலி அபேரத்ன தலைமையிலான ஆணைக்குழவின் அறிக்கையினை செயற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கமைய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது.

அதற்கமைய இவ்விடயம் தொடர்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்றில் விவாதம் இடம்பெற்றுள்ளது.ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரையை செயற்படுத்த நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உத்தேசிக்கப்பட்ட காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

உபாலி அபேரத்ன தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையை செயற்படுத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்றில் 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்,ஜனாதிபதியின் செயலாளரும் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.

உபாலி அபேரத்ன ஆணைக்குழு மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இரண்டையும் நீக்குவது குறித்து கடந்த ஆண்டு ஜனாதிபதியின் செயலாளர் சட்டமாதிபரின் ஆலோசனையை கோரியுள்ளார்.சட்டமா அதிபர் ஜனாதிபதி செயலாளருக்கு வழங்கிய ஆலோசனை கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க,உபாலி அபேரத்ன தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரையினை செயற்படுத்துவதற்கு எதிராக 10 பேர் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,ஜனாதிபதி செயலாளர் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதை பார்ப்பதை காட்டிலும் ஆணைக்குழுவின் அறிக்கையை செயற்படுத்துவதற்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை செயற்படுத்தமாட்டோம்,ஆணைக்குழுவின் அறிக்கை இரத்து செய்யப்படும்  என சட்டமாதிபர் நீதிமன்றுக்கு அறிவித்தால் தாக்கல் செய்துள்ள வழக்குகளை மீள பெற்றுக்கொள்வோம்.

நியாயமற்ற வகையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.இவ்விடயத்தில் சட்டமாதிபர் நீதிமன்றுக்கு தெளிவுப்படுத்தினால் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வோம்,இல்லாவிடின் வழக்கு நீண்டு செல்லும், என்றார்.

இதன்போது மீண்டும் உரையாற்றிய சபை முதல்வர்  அறிக்கையின் பரிந்துரையை செயற்படுத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்றில் 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இவ்விடயத்தை ஜனாதிபதியின் செயலாருக்கு அறிவிக்கிறேன் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட ராஜித சேனாரத்ன, அனைத்தையும் செய்து விட்டு தற்போது சட்டமில்லை என்று குறிப்பிடப்படுகிறது.இந்த ஆணைக்குழுவிற்கு பலகோடி நிதி செலவிடப்பட்டிருக்கும். அவ்வாறாயின் அந்த நிதியை யாரிடமிருந்து அறவிடுவது என்றார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் எவ்வளவு நிதி செலவானது என்பது தெரியாது நீங்கள் குறிப்பிட்ட விடயத்தை சட்டமாதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06