(எம்.மனோசித்ரா)
எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக வழமையை விட அதிக பவுசர்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பன இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல முனையங்களும் , சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையமும் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.
சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளைப் போன்று எந்தவொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முறையற்ற வகையில் எரிபொருள் விநியோகத்தை தவிர்ப்பதற்காகவே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் ஆலோசனையுடன் மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது நாளாந்தம் இரு முனையங்களிலிருந்தும் சுமார் 4000 மெட்லிக் தொன் டீசலும் , 3000 மெட்ரிக் தொன் பெற்றோலும் விநியோகிக்கப்படுகிறது.
இது எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்ட காலத்தில் விநியோகிக்கப்பட்டதை விட அதிகமாகும். எனவே எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM