பெண்ணின் கண்ணீர்!

Published By: Devika

07 Sep, 2022 | 01:39 PM
image

பெண்ணின் கண்ணீர் என்பது ஆணுக்கு வேண்டு­மானால், காரி­யங்களை சாதித்­துக்­கொள்ளும் கருவி போலவும், எதிரே இருப்பவரை வீழ்த்­­தும் ஆயுதம் போலவும் இருக்க­லாம்.

பெண்ணைப் பொறுத்தவரையில், அவளின் கண்ணீர் என்பது அவளு­டைய உண்மையின் மெய்ப்பாடு. அவள் மனதின் உணர்ச்சிகளை வெளிப்­படுத்த அவளுக்குத் தெரிந்த செயற்பாடு.

இந்த சமுதாயத்தை பொறுத்த­வரை, கண்ணீர் பெண்களுக்கு ஓர் ஆயு­தம் என பரவலாக கூறப்­படு­கிறது. 

ஆனால், அந்த ஆயுதத்தை வைத்து பெண்கள் எத்தனை எதிரி­களை வீழ்த்தியிருக்கிறார்கள், எத்­தனை உறவுகளை தொலைத்தி­ருக்கிறார்கள், எத்தனை உறவுகளி­டம் மண்டியிட்டு இருக்கிறார்கள் என்­பதை பெண்களின் கண்ணீர் மட்­டுமே சொல்லும்.

ஒரு பெண் தனது கண்ணீரின் மூலம் அனைத்தையும் நிறை­வேற்றிக்கொள்கிறாள் என்றால், அது வெறும் கண்ணீர் சார்ந்த விடய­மாக இருக்காது. அவளது உணர்வு சார்ந்த விடயமாகவே இருக்­கும்.

மனதுக்குள் எதையும் தேக்கி வைத்­துக்கொள்ளாமல் உணர்வை கண்ணீரால்  வெளியே கொட்டி­விடு­வதால் தான் பெண்­கள் எப்போதும் தெளிந்த மன­தோடு சிந்திக்க, செயற்­பட தெரிந்த­வர்க­ளாக இருக்கி­றார்­கள்.

தனது கண்ணீரை யார் முன் சிந்த வேண்டும் என்பதில் கூட பெண்கள் வரையறை வைத்திருப்பார்கள். ஓர் ஆணின் முன்னால் அழக்கூடாது என தனது மனதை இறுக்கமாக்கிக் கொண்­டால், அதன் பின்னர் அந்த இறுக்­கம் நலிவடைவது இயலாத காரி­யம்.

தனது கண்ணீரின் வலிமை மற்றும் அதில் உள்ள உண்மையை ஒரு பெண் மட்டுமே நன்கறிவாள். பல நேரங்களிலும் பெண்களின் கண்­ணீர் அர்த்தமற்றது என புறந்­தள்ளப்படுவதுண்டு.

தான் நேசிக்கும் ஆண், அவ­ளது உணர்வுகளோடு விளையாடுகை­யில், பல்வேறு கேள்விகளை உள்­ளடக்கிக்கொண்டு, அவனிடம் கேள்­வி­கள் கேட்டு தன்னை வெளிப்­­­படுத்திக்கொள்ள முடியாத நிலை­யில், கண்ணீரிடம் அடைக்க­லம் ஆகிறாள்.

உணர்வுகள் கண்ணீராய் வெளிப்­பட்ட பின்னரும் கூட, கண்ணீருக்கு காரணமானவர் அவளை அவம­திக்கும்போது மௌனம் காத்து, தன்னை மூடிக்­கொள்கிறாள்.

தமிழ் இலக்கிய மரபில் எட்டு மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்­சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகியவை.

இந்த எட்டு வகையான வெளிப்­பாடுகளிலும் அவள் துளியேனும் கண்ணீராகத் துளிர்த்துவிடுவாள். பெண்ணுக்கு அவளுடைய எந்த உணர்வாக இருந்தாலும், அதன் அடிப்படையான உண்மையை கண்ணீராகவே வெளிப்படுத்தத் தெரிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right