11 இலங்கையர்கள் கேரளாவில் கைது

Published By: Digital Desk 3

06 Sep, 2022 | 12:34 PM
image

மீன்பிடி படகில் கனடா செல்ல திட்டமிட்டிருந்த 11 இலங்கையர்கள் நேற்று (05) கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு அளித்த தகவலின் பேரில் தெற்கு கேரளாவில் கொல்லத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த இரண்டு இலங்கை பிரஜைகள் காணாமல் போயுள்ளார்கள். க்யூ பிரிவு (சிஐடி பிரிவு) அவர்களின் தொலைபேசி சிக்னல்களைப் பின்பற்றி கொல்லத்தில் அவர்களைக் கண்டுபிடித்துள்ளனர். தேடுதலுக்குப் பிறகு, தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போன இருவர் உட்பட 11 பேரை பொலிஸார்  கைது செய்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்பது பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்து தென் தமிழகத்தின் ராமநாதபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் கேரள பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

விசாரணையின் போது, அவர்கள் தலா 2.5 இலட்சம் ரூபாயை கொழும்பில் உள்ள லக்மனா என்ற ஏஜென்டிடம் கொடுத்து, இந்தியாவின் தெற்கு கடற்கரையில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்குப் பயணம் செய்வதை உறுதி செய்ததாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.

அவர்களிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு கியூ பிரிவு குழுவும் கேரளா சென்றுள்ளது. “கைது செய்யப்பட்ட சில உள்ளூர் உதவிகள் கிடைத்ததால் மேலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து எங்களிடம் சில தடயங்கள் உள்ளன” என்று கொல்லம் பொலிஸ்  கமிஷனர் மெரின் ஜோசப் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28