பிரேரணையை பார்த்த பின் அடுத்தகட்டத் தீர்மானம் - ஜெனிவா செல்லவுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தகவல்

Published By: Vishnu

05 Sep, 2022 | 04:56 PM
image

(ரொபட் அன்டனி)

இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள நாங்கள் அரச தூதுக்குழுவாக ஜெனிவா செல்லும்போது  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் சந்தித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதுடன் அரசாங்கத்தின் கொள்கையை  அவருக்கு  எடுத்துரைப்போம் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

மேலும்  பொறுப்புக்கூறல் நல்லிணக்க செயற்பாட்டை  சகல தரப்பையும் இணைத்துக் கொண்டு சுமுகமான முறையில்  முன்னெடுக்க முடியும் என்பதே எமது அணுகுமுறையாகும். இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் எவ்வாறான   பிரேரணைமுன்வைக்கப்படும் என்பதை  பார்த்த  பின்னரே அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

இம்மாதம் 12ஆம் திகதி ஜெனிவா மனித  உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில்  இலங்கை குறித்த  அறிக்கையை  12 ஆம் திகதி மனித உரிமை ஆணையாளர்  மிச்செல்  வெளியிடவுள்ளதுடன்  அன்றைய  தினம்  இலங்கை குறித்த விவாதமும் நடைபெறவுள்ளது. மேலும் இம்முறை கூட்டத் தொடரில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, மற்றும்   வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் பங்கேற்கவுள்ளதுடன் அறிக்கையொன்றும் இலங்கை சார்பில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  

இந்நிலையில் இது குறித்து ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்து கொள்ளவுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிடுகையில்

வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை மக்கள் சகல தரப்பினருடனும் இணைந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் நல்லிணக்க செயற்பாடுகளை, நம்பிக்கைத் தன்மையுடன்  முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம்.  ஏற்கனவே   இது  தொடர்பில் நான்  பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளேன். பொறுப்புக்கூறல் நல்லிணக்க செயற்பாட்டை சகல தரப்பையும் இணைத்துக் கொண்டு சுமுகமான முறையில்  முன்னெடுக்க முடியும் என்பதே எமது அணுகுமுறையாகும்

இம்முறை மனித உரிமை பேரவை  கூட்டத் தொடரில் கலந்து கொள்ள   நாங்கள்  அரச தூதுக்குழுவாக  ஜெனிவா செல்லும்போது  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து  கலந்துரையாட  எதிர்பார்ப்பதுடன்   அரசாங்கத்தின் கொள்கையை  அவருக்கு  எடுத்துரைப்போம்.

இதே.வேளை இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் எவ்வாறான   பிரேரணைமுன்வைக்கப்படும் என்பதை  பார்த்த  பின்னரே அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22