(எம்.வை.எம்.சியாம்)
தம்புள்ள பிரதேசத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவி கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தம்புள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கொட்டாவெல பிரதேசத்தில் கடந்த மாதம் 31 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து பணிபுரிந்து மீண்டும் நாட்டிற்கு திரும்பிய நிலையில் கணவன் மூலம் இவ்வாறு கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவன், மனைவிக்கு இடையில் இருந்த நீண்டகாலமாக காணப்பட்ட முறுகல் நிலை கொலைக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய கொட்டவெல, தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM