தலைவர்களையும் தனி குடும்பத்தையும் மன்னர்களாக்கியகாலம் நிறைவடைந்து விட்டது - கம்மன்பில

Published By: Digital Desk 5

05 Sep, 2022 | 10:22 AM
image

(இராஜதுரை ஹஷான்)

தலைவர்களையும், தனி குடும்பத்தையும் மன்னர்களாக்கிய காலம் நிறைவடைந்து விட்டது. மக்களை தலைவர்களாக்குவதற்காகவே மேலவை இலங்கை கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

சிங்களவர்களே,முஸ்லிம்களே,தமிழர்களே வாருங்கள்,பற்றியெறியும் தாய் நாட்டை ஒன்றிணைந்து பாதுகாப்போம் என மேலவை  இலங்கை கூட்டணியின் உப தலைவர் உதய கம்மன்பில நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மஹரகவில் உள்ள தேசிய இளைஞர் மன்றத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மேலவை  இலங்கை கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

1947ஆம் ஆண்டு முதல் நாட்டில் அரசியல் கூட்டணிகள் பல தோற்றம் பெற்றுள்ளன.இதுவரையில் உதயமாகிய அரசியல் கூட்டணிகள் மக்களின் அடிப்டை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.2019ஆம் ஆண்டு பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டது.

எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2019ஆம் ஆண்டு மக்களாணையை மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கினார்கள்.மக்கள் கொள்கைக்கு பதிலாக தனிப்பட்ட குடும்ப கொள்கையை அரச நிர்வாகத்தில் முன்னெடுத்ததால் மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை முழுமையாக பலவீனத்தடுத்தப்பட்டது.

தவறான பேருந்தில் ஏறி விட்டோம்,ஆகவே இறங்க வேண்டும் என்பதால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தற்போது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கொள்கை திட்டத்துடன் பரந்துப்பட்ட கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

தவைர்களையும்,குடும்பத்தையும் மன்னர்களாக்கிய காலம் முடிவடைந்து விட்டது.மக்களை தலைவர்களாக்கும் ஆரம்பத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம்.தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தோற்றத்தை 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமைச்சரவையில் குறிப்பிட்டோம்.பொய்யுரைக்க வேண்டாம்,மக்களை அச்சமடைய செய்ய வேண்டாம் ,அப்படி ஒன்றும் நிகழாது என்பதே எமது கருத்திற்கான எதிர் பதிலாக அமைந்தது.

நாடு மிக மோசமான வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது என்பதை 2021ஆம் ஆண்டு ஜீன் மாதம் ஊடக சந்திப்பை நடத்தி குறிப்பிட்டோம்.நாங்கள் பொய்யுரைக்கிறோம்,எமக்கு போதுமான அளவு டொலர் உள்ளது,ஆகவே அச்சமடைய வேண்டாம் என்பதே அரசாங்கம் குறிப்பிட்டது.

நெருக்கடியான சூழ்நிலையிலும் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.கடன் பெறுவதை அரசாங்கம் பெருமையுடன் குறிப்பிடுகிறது.பெற்றுக்கொள்ளும் அனைத்து டொலர்களையும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பிற நாடுகளிடம் கடன் பெறுவதை விடுத்து வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள அவதானம் செலுத்த வேண்டும்.மன்னார் பகுதியில் மண்ணெண்ணெய் அகழ்வு தொடர்பிலான 6 நிபந்தனைகளை ஒருவருட காலத்திற்குள் நிறைவேற்றினோம்,இருப்பினும் தற்போத அது குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை.பொருளாதார மீட்சிக்கான எந்த முறையான திட்டங்களும் அரசாங்கத்திற்கும் கிடையாது,அரசாங்கத்திற்கும் கிடையாது.

ஒருவரை ஒருவர் விமர்சித்து.மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளை மாத்திரம் எதிர்தரப்பினர் புனருத்தாபனம் செய்கிறார்கள்.பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எமது கூட்டணியில் பிரதான நோக்கமாகும்.தமிழ்ரகள் வாருங்கள்,முஸ்லிம்கள் வாருங்கள்,சிங்களவர்கள் வாருங்கள் நாம் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21