அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களின் அமெரிக்காவை மீண்டும் மாபெரும் ஒன்றாக மாற்றுவோம் என்ற நிகழ்ச்சித் திட்டமானது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு பென்சில்வேனிய மாநிலத்தில் ஆற்றிய முக்கிய உரையின் போது தெரிவித்தார்.
அவர் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் கைச்சாத்திடப்பட்ட பிலடெல்பியா நகரிலுள்ள சுதந்திர மண்டபத்திலிருந்து மேற்படி உரையை ஆற்றினார்.
இதற்காக இரு வருடங்களுக்கு முன்னர் ட்ரம்பிற்கு வாக்களித்த 74 மில்லியன் அமெரிக்கர்களையோ அன்றி குடியரசுக்கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரையுமோ தான் குற்றஞ்சாட்டவில்லை என அவர் கூறினார். ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாட்டைப் பின்னோக்கிக் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில் கட்சியைச் சேர்ந்த உயர்மட்ட உறுப்பினரான கெவின் மக்கார்தி உரையாற்றுகையில், ஜோ பைடன் அமெரிக்க ஆன்மாவை படுகாயப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் அதிகார சமநிலையைத் தீர்மானிக்கவுள்ள இடைக்காலத் தேர்தல் ஆரம்பமாவதற்கு இரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மேற்படி இருவரது விமர்சனங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM