(நா.தனுஜா)
காணாமல்போனோரின் குடும்பங்களின் பொருளாதார, சட்ட, நிர்வாக மற்றும் உணர்வு ரீதியான தேவைப்பாடுகள் தொடர்பில் கவனம்செலுத்தி, உரியவாறான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான உதவிச்செயற்திட்டமொன்றை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தவிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.
வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற போர்கள், வன்முறைகள், இயற்கை அனர்த்தங்கள், மனிதாபிமான நெருக்கடிகளால் தமது அன்பிற்குரியவர்களை இழந்த அல்லது குடும்பத்தினரைப் பிரிந்த அனைவரையும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் (நேற்று முன்தினம்) நினைவுகூருவதாகத் தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம், தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளமுடியாமல் துன்பப்படுபவர்களின் பிரச்சினை, பெரிதாக அடையாளங்காணப்படாத மனிதாபிமானப் பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
'தமது பெற்றோருக்கு, கணவருக்கு, பிள்ளைக்கு, சகோதரருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலிருப்பதென்பது, சம்பந்தப்பட்ட குடும்பங்களைப் பொறுத்தமட்டில் தாங்கிக்கொள்ள இயலாத சுமையாகக் காணப்படுவதுடன் நினைவுகூரவும் முடியாமல் - அவர்கள் மத்தியில் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையிலான போராட்டத்தைத் தோற்றுவித்திருக்கின்றது.
காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. எனவே காணாமல்போன தமது அன்பிற்குரியவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்பதை அறிந்துகொள்வதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் கொண்டிருக்கின்ற உரிமைக்கு முன்னுரிமையளித்து, அவர்களுக்குரிய பதிலை வழங்குவதற்கு அரசுக்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருக்கின்றோம் என்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM