(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்குள் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது. என்றாலும் செலவினங்களை குறைப்பதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக வற் வரி அதிகரிப்பு தொடர்பாக மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது என எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் வரிக் குறைப்பு இடம் பெற்றதாலேயே அரச வருமானம் குறைந்ததாக குற்றஞ்சாட்டியவர்கள், இப்போது இந்த வரி அதிகரிப்பை எதிர்க்கப் போகின்றார்களா?.
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக ஒரு விடயம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வற் வரியை 12 இல் இருந்து 15 வீதமாக அதிகரிப்பதே அந்த விடயம்.
கடந்த காலங்களில் வற் வரியை குறைத்தமையினாலேயே 600 மில்லியன் ரூபா வருமானம் குறைந்ததாக கூறியவர்கள் இப்போது வரி அதிகரிப்பு தொடர்பாக என்ன கூறப் போகின்றார்கள்.
நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் ஊடாகவே நிவாரணங்கள் வழக்கப்படும். அதேவேளை கடன், செலவு முகாமைத்துவம் தொடர்பிலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் 4 மாதங்களில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியாவிட்டாலும், செலவுகளை கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கின்றோம். முகாமைத்துவம் செய்து முன்னோக்கிப் பயணிக்க முடியும்.
பாராளுமன்றத்தில் தற்போது நடக்கும் விவாதம் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சம்பந்தமானதே. இது 2021ன் 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் திருத்தமே.
அவ்வாறின்றி ஒரு வருடத்திற்காக சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் அல்ல என்பதை எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை தொடர்ந்ததன் காரணமாகவும் சமூக அரசியல்,நெருக்கடி நிலைமை காரணமாகவும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
வெளிநாட்டு அந்நிய செலாவணி குறைவடைந்து ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டது. இத்தகைய சூழ்நிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தை நான்கு மாதங்களுக்கு முகாமைத்துவப்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஜெனிவா தொடர்பில் சபையில் தெரிவித்தார். அவர் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போது இரண்டு தடவைகள் ஜெனிவா யோசனை தோற்கடிக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை யார் கொண்டு வந்தது? ஜே .ஆர். ஜெயவர்தனவின் அரசாங்க காலத்திலேயே கொண்டுவரப்பட்டது.
வடக்கின் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காகவே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. பயங்கரவாதிகளாக செயல்பட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காகவே அது கொண்டுவரப்பட்டது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM