(எம்.வை.எம்.சியாம்)
மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய 12 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மே 9 திகதி இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னர் நடைபெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய 12 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களான அருந்திக்க பெர்ணாண்டோ, விதுர விக்ரமநாயக்க, தாரக பாலசூரிய மற்றும் மகர பிரதேச சபை தலைவர் உட்பட அவர்களின் வீடு மற்றும் காரியாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேகநபர்கள் கடவத்த, தங்கொட்டுவ, ஹொரண, கேகாலை குற்றத்தடுப்பு பிரிவினர், மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர், மற்றும் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 21, 24 ,50,26, 44, 61, 53, 35 ,32 ,37, 49, 58 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கடவத்த, லிஹினியாகம, ஹொரண, கேகாலை, ரத்மலானை, மஹவ, ககடகஸ்கெலிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM