மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழப்பு : நவகத்தேகம பகுதியில் சம்பவம்

Published By: Vishnu

30 Aug, 2022 | 03:42 PM
image

நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குற்பட்ட தம்மன்னாவெட்டிய கிராமத்தில் காட்டு யானையொன்று இன்று 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த காட்டு யானை கிராமத்திலேயே பல நாட்களாக அங்குமிங்கும் சுற்றித்திரிந்ததாக கிராம மக்கள் கூறியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த காட்டு யானை 25 வயதுடையது என மதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

தனியார் வீடொன்றிலிருந்து அதிவலு கொண்ட மின்சாரத்தைப் பெற்று யானைவேலியில் பொருத்தியமையின் காரணத்தினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த வீட்டின் உரிமையாளர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாகவும் அவரது தாயார் குறித்த வீட்டிலேயே வசித்து வந்துள்ளதாகவும் இவ்வாறு யானைவேலிக்கு அதிவலு கொண்ட மின்சாரம் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் 75 வயதுடைய தாயார் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மற்றும் நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32