சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து பேச்சு

30 Aug, 2022 | 02:40 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது குறித்து  சர்வதேச நாணய நிதியக்குழுவினருக்கும் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் நேற்று செவ்வாய்கிழமை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஏதுவாய் அமைந்த காரணிகள் , அவற்றிலிருந்து மீள்வதற்கு தம்மால் முன்வைக்கப்படும் யோசனைகள் என்பன குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவிற்கு தெளிவுபடுத்தினார்.

பொருளாதாரம் மற்றும் நிதி மறுசீரமைப்பு திட்டங்கள் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தூதுக்குழு கடந்த 24 ஆம் திகதி நாட்டுக்கு வியஜம் செய்தது. 

இக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை மீண்டும் ஜனாதிபதியுடன் நாணய நிதியக் குழுவினர் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். இதன் போது நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பான தமது மதிப்பாய்வுகள் தொடர்பில் அக்குழுவினர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவுள்ளனர்.

குறித்த தூதுக்குழுவிற்கு பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நொசாகி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டினை எட்டுவதை நோக்கி முன்னேறுவதே இதன் நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34